யாரும் அரியாத உண்மை...


நட்சத்திரங்கள் ஒன்று கூடி,
விரிக்கும் வெள்ளைக் கீற்றுகளின்,
அழகிய கூட்டத்தில் இருந்து,
வருபவள் தேவதை என்றால்...
உன் பெயர் என்ன?

வண்ணங்கள் பல பெற்று,
வரையப்பட்ட பெண் ஓவியத்தில்,
இருப்பவள் அழகி என்கிறார்கள்...
அப்படியெனில் நீ யார்?

பெண்ணே, நீ...
தேவதைகளின் தேவதை என்பதும்,
அழகிகளின் அரசி என்பதும்,
யாரும் அரியாத உண்மையடி!

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக