முத்தமாய் பனி மழை!


நெற்றி முட்டி,
கன்னங்கள் தேய்த்து,
ஒரு துளி முத்தமும்...
சிறு பார்வையோடும்,
அழகிய புன்னகையோடும்,
ஒரு சின்ன வெட்கமும்...
கைகளை பிடித்து,
நெற்றிப்பொட்டில் வைத்து,
சில அன்பான வார்த்தைகளும்...
நான் கேட்கும் பொழுது,
புன்னகையோடு வெட்கத்தையும்,
அன்பான வார்த்தைகளையும்,
உடனே தந்துவிட்டு...
முத்தத்தை மட்டும்,
கடன் வைக்கிறாய்...

கடனை எல்லாம்,
கொஞ்சம் கொஞ்சமாய்,
அவ்வப்பொழுது தந்துவிடு,
முத்தத்தின் பனி மழையில்,
மொத்தமாய் நனைந்து,
என்னையும் நனைத்துவிடாதே!

1 பின்னூட்டங்கள்:

பெயரில்லா சொன்னது…

Like

கருத்துரையிடுக