கதைகள் கவிதைகளாய்!


கல்லூரி விடுதியில்,
என்னுடைய அறையில்,
நெடுநாட்களாக...
என்னை சுமந்த நாற்காலிகளும்,
சாய்ந்து நின்ற கதவுகளும்,
எந்தன் உறக்கம் காணாத தலையணையும்,
ஆயிரம் ஆயிரம் கதைகளாய்...
உந்தன் பிரிவின் வலியையும்,
உந்தன் அன்பின் இழப்பையும்,
கவிதையாய் சொல்லும்!
2

பிரிவின் வலி...


கல்லூரி விடுதியின்,
தாழிட்ட அறையில்...
பாலையில் எறியும்,
மனித உயிரின்,
பெருத்த வலியோடு,
ஒவ்வொரு நாளும்,
விடைபெறும் என்று...
உன்னை பிரியும்,
அன்றைய பொழுதில்,
நான் அறிந்திருக்கவில்லை!

அன்பைத் தேடி...


கல்லூரி விடுதியின்,
உணவுப் பட்டியலில்,
தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை...
உணவோடு பகிரப்படும்,
அம்மாவின் அன்பும் அக்கறையும்!
2

பெற்ற பலன்


பிறக்கும் குழந்தையின்,
உடலுக்கு உயிரையும்,
மனதிற்கு அன்பையும்,
நிரப்பித் தருகிறாய்!

சிறிது காலம்,
பிள்ளைக்கு உணவாக,
குருதியையும் தருகிறாய்!

நிரப்பித் தந்த,
அன்பை எல்லாம்,
உயிர்களிடம் வெளிப்படுத்தும்,
பண்பையும் தருகிறாய்!

ஒவ்வொரு நிலையிலும்,
ஒவ்வொரு செயலுக்கும்,
ஊன்றுகோலாய் இருந்து,
வாழ்க்கையில் வெற்றியையும்,
தேடித் தருகிறாய்!

பலன் ஏதும் வேண்டாது,
நீ செய்த செயல்களுக்கு,
நான்...
என்ன செய்ய போகிறேன்?
3

அறை எண் 9


வாடை காற்றால்,
அசையும் மரங்கள் கொண்ட,
கல்லூரி விடுதியில்,
சன்னலின் ஓரம்,
தனியாய் அமர்ந்து,
இரசிப்பதும்...
வருந்துவதும்...
ஏங்குவதும்...
உந்தன் அன்பை எண்ணியே!