0

பேய் வீடு



பணமெனும், பேயின் வீட்டில்...
அகப்பட்டு உழன்றுக் கொண்டிருக்கும்,
ஒவ்வொரு மனிதனின் மனதில்...
ஆழமாய் புதைந்து கிடக்கும்,
அழகான இன்பப் புன்னகைகளை...
நன்றாய் துளையிட்டு எடுப்பது,
உன்னுடன் நான் இருந்து,
மனம் பகிரும் தருணங்களே!
0

ஆதவன்

ஒவ்வொரு நிமிடமும்,
உன் கீற்றுத் தூரிகையால்...
வானம் எங்கும்,
வண்ணம் வீசுகிறாய்!

ஆகையால்...
உன்னில் கொட்டிக் கிடக்கும்,
ஆயிரம் ஆயிரம் வண்ணங்களில்,
சிலவற்றை மட்டும் பரிக்கவே...
எட்டி எட்டி குதித்து,
உன்னை பிடிக்கப் பார்க்கிறேன்.

ஆனால் என் முகத்திலும்,
வெளிர் வண்ணத்தை வீசிவிட்டு...
அழகாய் மறைந்து போகிறாய்!