3

பொய்...

உன்னை எண்ணி,
எழுதும் கவிதைகளில்...
பொய்கள் எல்லாம்,
பிழையாகிப் போனால்...
கவிதைகள் யாவும்,
மாயமாய் போகும்!

அதனால் தான்...
உன்னை பற்றிய,
அழகியல் கவிதைகளில்,
கற்பனை வண்ணங்கள்,
எப்பொழுதும் தூவுவதில்லை!
4

நீயும்... நானும்...

தினமும்...
வந்து வந்து போவதற்கும்,
பிறையாய் தேய்வதற்கும்,
நீ நிலவில்லை பெண்ணே....
என்னுடனே இருக்கும் விழி!

வருடந்தோறும்...
மழை மன்னன் சென்றதும்,
என்னை அணைக்க வருவதற்கு,
நீ மூடுபனியல்ல பெண்ணே...
எந்தன்,
உயிரை காக்கும் உடல்!

எப்போதும்...
ஓயாது கரையை அரிப்பதற்கு,
நீ அலையல்ல பெண்ணே...
என் துயரை போக்கி,
கண்ணீர் துடைக்கும் விரல்!

தனித்தனியாய் நிற்பதற்கு,
நீயும் நானும்,
வேறல்ல பெண்ணே...
நாம்,
கவிதைகள் பதிக்கப்பட்ட மடல்!
4

அதிசயம்

நிலா மண்ணை தொட்டு போவதும்,
மழைச் சாரல் மண்ணிலிருந்து பெய்வதும்,
சூரியன் நம்மை இரவில் குளிர்விப்பதும்,
கனவுகள் கண் விழித்ததும் வருவதும்,
என்றும் நடவாத அதிசயம் என்றால்...
நான் உன்னை காணாது இருப்பதும்,
அதிசயமே!

புன்னகை வங்கி


முடிவில்லா கனவொன்று காண,
விடியாத இரவுகள் தொடரும்,
நாள் ஒன்று வேண்டுமடி...

அந்த கனவு முழுதும்,
அழகாக நீ நிறைந்து,
முத்தங்கள் வழங்க வேண்டுமடி...

ஒவ்வொரு முத்தத்தின்,
சின்னஞ்சிறு இடைவெளியில்,
பூக்கின்ற புன்னகையை,
நான் பறிக்க வேண்டுமடி...

நான் பறித்த,
உனது புன்னகையை,
எனது விழிகளிலே,
சேமிக்க தோணுதடி!