நீயும்... நானும்...

தினமும்...
வந்து வந்து போவதற்கும்,
பிறையாய் தேய்வதற்கும்,
நீ நிலவில்லை பெண்ணே....
என்னுடனே இருக்கும் விழி!

வருடந்தோறும்...
மழை மன்னன் சென்றதும்,
என்னை அணைக்க வருவதற்கு,
நீ மூடுபனியல்ல பெண்ணே...
எந்தன்,
உயிரை காக்கும் உடல்!

எப்போதும்...
ஓயாது கரையை அரிப்பதற்கு,
நீ அலையல்ல பெண்ணே...
என் துயரை போக்கி,
கண்ணீர் துடைக்கும் விரல்!

தனித்தனியாய் நிற்பதற்கு,
நீயும் நானும்,
வேறல்ல பெண்ணே...
நாம்,
கவிதைகள் பதிக்கப்பட்ட மடல்!

4 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக