இன்று அழகியல் பௌர்ணமி

கருவானின் வெளிர் நிலவு,
மண்ணில் தன் பொழிவை,
படர்வித்து நெகிழ்ந்து வந்து...
தன்னை தானே,
கண்ணாடியாய் உரு மாற்றி...
உனது அழகியல் தேகத்தை,
உனக்கே காட்டி செல்வதால்...
இன்று மட்டும்,
உன்னுடைய அழகியல் பௌர்ணமி!
3

கண்ணாடியும் கரையுதே!

கண்ணாடியும் தண்ணீராய்,
கரைந்தே போகிறது...
உன்னுடைய அழகிய முகத்தை,
அதனிடத்தில் காட்டும் பொழுது...

அவ்வாறு...
கரைந்தோடிய நீரெல்லாம்,
உரைந்தே போகிறது...
உன்னுடைய அழகிய அன்பை,
என்னுடன் பகிரும் பொழுது!