12

தண்டனை...



முத்தத்தின் சத்தம்
உலகில் ஓய்திடினும்
எந்தன் மனதோடு
ஓயவில்லை...

அதன் ஈரம்
உதட்டோடு காய்ந்திடினும்
எந்தன் மனதோடு
காயவில்லை...

உணர்வுகளால் ஈர்த்து
உரைந்த இரத்தமும்
இதுவரை
தழலுற்று மீளவில்லை...

அந்த மெளனத்தில்
பார்வைக் கீற்றுகளாய்
ஒலித்த வார்த்தைகளும்
மறையவில்லை...

ஒற்றை முத்தத்தில்
அளித்த தண்டனையே
போதுமடி பெண்ணே
நாம் இருவரும்
சேரும் வரை...