0

நான் பிழை...


 ஆண்:

நான் பிழை...

உன் மெய் எனும்,

உண்மையில் சிறு பிழை...


நீ மழலை...

என் மீது விரலால்,

தவழும் மழலை...


பெண்:

வார்த்தை மழையினில்,

எனை நனைத்தது போதும்...

இவை என் விழியினில்,

முத்தங்கள் பதித்து,

வரைந்த கவிதைகள் போலும்...


ஆண்:

அழகியே...

நீயே என் கவிதை...

வார்த்தைகள் அதற்கு தேவையில்லை...

நான் உதிர்பதெல்லாம்,

உன்னிடமிருந்து பறித்த மிச்சங்களை...


பெண்:

என்னை மொத்தமாய்,

களவு கொண்ட கள்வா...

மீதமிருக்கும் அனைத்து அன்பையும்,

களவு கொள்ள வருவாய்...


ஆண்:

நான் பிழை...

உன் மெய் எனும்,

உண்மையில் சிறு பிழை...


நீ மழலை...

என் மீது விரலால்,

தவழும் மழலை...