கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0

நான் பிழை...


 ஆண்:

நான் பிழை...

உன் மெய் எனும்,

உண்மையில் சிறு பிழை...


நீ மழலை...

என் மீது விரலால்,

தவழும் மழலை...


பெண்:

வார்த்தை மழையினில்,

எனை நனைத்தது போதும்...

இவை என் விழியினில்,

முத்தங்கள் பதித்து,

வரைந்த கவிதைகள் போலும்...


ஆண்:

அழகியே...

நீயே என் கவிதை...

வார்த்தைகள் அதற்கு தேவையில்லை...

நான் உதிர்பதெல்லாம்,

உன்னிடமிருந்து பறித்த மிச்சங்களை...


பெண்:

என்னை மொத்தமாய்,

களவு கொண்ட கள்வா...

மீதமிருக்கும் அனைத்து அன்பையும்,

களவு கொள்ள வருவாய்...


ஆண்:

நான் பிழை...

உன் மெய் எனும்,

உண்மையில் சிறு பிழை...


நீ மழலை...

என் மீது விரலால்,

தவழும் மழலை...

2

இனிதான் இனிதாய்...


இனிதான் இனிதாய்...
இரவினில் இதழ்கள் இசைப்பதும் இனிதாய்!
இனிதான் இனிதாய்...
இமையில் இமை இமைப்பதும் இனிதாய்!

இசைந்து இசைந்து இல்லில்,
  இறையென இருந்தோம்...
இடரிலும் இன்னலிலும் இருவரும்,
  இணைந்தே இருப்போம்....

இறவா இரவினில்,
 இச்சையின் இசைவினில்...
இழக்கயேதும்,
 இல்லாது இருப்போம்...

(இனிதான் இனிதாய்)

இறுக்கிய இடையினில்,
இறுகிய இதயமும்,
இறகாய் இடருதே...

இவன் இருப்பது,
 இவள் இடையில்...
இவள் இயங்குவது,
 இவன் இசைவில்...

(இனிதான் இனிதாய்)

இருவரும் இரையாவது,
இச்சையெனும் இறையால்,
இனிதான் இனிதாய்!
இனிதான் இனிதாய்!