அழகியலின் விதி மீறல்


வர்ணனை கொடுக்க...
நிலவை அழைத்தேன்,
    நீரை அழைத்தேன்...
மானை அழைத்தேன்,
    மீனை அழைத்தேன்…
தேனை அழைத்தேன்,
    தேவதைகளை அழைத்தேன்…

அவள்…
எந்த உவமைக்குள்ளும்,
அடங்கவில்லை!

அவளை…
எவற்றிற்கும் ஒப்புமையாக்க,
என் மனம் ஒப்பவில்லை!

ஏனெனில்,
அவள் அழகியலின்,
விதி மீறல்!


0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக