என்னவள்

உறவுகளின் கூடுதல் காண வந்த
பெண்ணவ ளென்றும் என் தாயவள்
ஈன்றெடுக்காத கோமகள் புது மணமகள்
என வந்த அர்த்தநாரிக் குலமகள்!
2

அழுகை

உமிழ் நீர்த் தெரித்து
புது வுலகங் கண்ட
சின்னஞ் சிறு பிள்ளை
பிறப்பை உலகு ணர்த்த
தாமாய் கற்றுத் தெளிந்த
அழகிய முதற் கவிதை
கமலச் செவ்விதழ் விரித்து
ஒளித் தெரிக்கும் அழுகை
2

கனவு

விடியற் காலைப் பொழுது
கருவிழிப் பார்வைக் கதிர்கள்
ஊடுருவல் உரைந்த தருணம்
ஊரை விழுங்கிய பனிக்கோர்வை
குகைக்குள்ளே மறைந் திருந்த
தேவதையவள் வெளி யொளிர்ந்து
விரலால் மொழிப் பேசி
அருகிலே எனை யழைத்தாள்
தூரத்தில் அவள் இருக்க
எந்தன் தலை வருடல்
நான் உணர்ந் தெழுந்தேன்
வருடியதாய் உணர வில்லை
அன்பை யுணவாக்கி உண்டதாய்
கூறியது மனப் பசி
ஏனென்றால் வருடிய விரல்கள்
தாயின் ஐம் பரிவுகள்
3

அனிச்சம்

தொடு மலர்ச் செய்கையில்
தலைத் தொங்கும் அனிச்சத்தை
பசுமைப் படர்ந்த காட்டிற்குள்
இடர் படும் செடிதனை
பரைத்துத் தேடினள் கண்டதும்
ஐந்தண்டு கை யதனில்
பிடுங்கி நட்டாள் கூந்தலில்
வாடியது அனிச்ச மல்ல
பெருகிய தவள் நாணம்

தொடுஞ் செயலி லுருகும்
அனிச்ச மலர் போல
நாயகன் மூச்சுக் காற்றிலும்
உருகி வழியும் பெண்மை
2

உயிர்ச் சிற்பங்கள்

பதிக்கும் பாதத்தை
உள்ளிழுத்து உறவாடும்
சீர்மிகு மணலொடு
ஆர்பரிக்கும் கரையோரம்
தென்னந் தோலை
போர்த்தி யுடுத்தி
மூங்கில் கால்களை
துணையெனக் கொண்டு
அமர்ந்து நிற்கும்
குடில் கோபுர
சிறு கோவிலின்
உயிர்ச் சிற்பங்கள்
வெளி நின்று
நகைப்பது காண்

விதி

சில்லரைத் தேடி விழியிரண்டும்
வழிப்போக்கன் கை தன்னில்

சூரியக் கீற்று சுடர்விட்டும்
இருள் தோய்ந்த தென்ன
நின் முகம் அதனில்

பசிக் காலன் கயிறு கொண்டு
வயிற்றை சிறை பிடித்தான்
நின்னை நடுத் தெருவில்
விதியாலே ஆட்டி வைத்தான்
4

பூக்காரி

சிரிப்பைச் சேகரித்து
நூல் கயிற்றில்
சிறை பிடித்துச்
சில்லரை தேடும்
பெண் அவளின்
புன்னகைப் புதையலை
கண்டு சிறு
பூக்கள் யாவும்
ஆர்ப்பரிக்கும்
2

பந்தம்

என் விரலைத் துணை யேற்று
நடை பழகும் தத்தை யிடுட்டுத்
திமிரும் சிறு பிஞ்சுப் பாதங்கள்
சிறிது சிறிதாய் இடம் பெயரும்

நீ வளர துணை யானேன்
இது எனக்குப் பெருமை யடா
எந்தன் முதுகின் தண்டுத் தேய்ந்து
உடலொடு தலை கவிழும் காலத்தே
ஊன்றுத் தடி எனக்குத் தாராமல்
துணையாய் நீயெனக்கு வேண்டு மடா
2

இமைச் சிறகு

சிறகுகள் புதிதாய்
என்னுள் முளைத்து
காற்றை துளைத்து
தூறப் பறந்தாலும்
ஒன்றை மட்டும்
மறவாதென் மனது

கரு நிலவை
தாழிட்டு அடைகாக்கும்
இமைச் சிறகுகளின்
நீட்டல் முடிகளை
என் விரல்கள்
வருடுவதை மறப்பதில்லை

என் நிழலில் நான்

நரைத்த நாட்களின்
இளமைக் காலம்
தேடிப் பார்த்தேன்
கிடைக்கவில்லை

நரைக்கும் முன்
என் நிழலாய்
மாறிப் போனவனை
கனம் ஒன்றிலும்
நினைத்ததில்லை

மூன்று கால்
நாயகன் ஆகிவிட்டேன்
எந்தன் நிழலின்
துணைவனாகிவிட்டேன்
3

நட்பிலக்கணம்

வெண் சுவரின்றி
வாய் பிளக்கும்
சிறு நகையும்
மொழி அறியாது
நா தெரிக்கும்
குறை வரியும்
குழந்தையிடம்
அழகு தான்

துன்பம் துயரம்
இன்பம் இடுக்கண்
இவையாவும்
அர்த்தநாரிப் பெண்
உன்னுடன் பகிர்வதும்
அழகு தான்

பிறப்பால் மலரும்
உறவுகள் இடையில்
மறைந்து மிளிரும்
அன்பு உருமாறி
மருவிய நட்பும்
அழகு தான்

உணர்வால் பிறக்கும்
தோழமைத் தேடி
திகைக்கக் கிடைக்கும்
நட்பே உருகி
மருவிய நட்பும்
அழகு தான்
3

காதல்

இரவு உறக்கம் இமையை நெருங்கும்
உன் நினைவுகள் யாவும்
அதனை எதிர்த்து நிற்கும்
பனித் துளிகள் சேர்த்து வைத்த
குளிர் கூட்டு வெண்ணிலவு
மனது மட்டும் உறக்கங் கேட்கும்
நினைவுச் சண்டையில்
உறக்கமெனும் சடலம்
தனக்குத் தானே தீ வைக்கும்
இவ்வுணர்வை என்னவென்று சொல்வேன்
காதலா இல்லை உறக்கம் சாதலா?
2

என் மேகத் தோழி

ஒற்றைக் கண் பெண்ணவள்
திங்களுக்கிரு முறை அயற்வாள்...
அவளுறக்கம் கண்ட ஊறார்
அமாவாசை என்பர்!

உடல் நலின மேனிக்கு
வெண்ணிற புகையுடுத்தி
வலம் வருவாள்...

மண் வாடை மலர
நீர்த் தெளிப்பாள்
எந்தன் இரவுத் தோழி
கரு விண் மேகமே...
2

மனிதப் பிரிவு

பழகியது சில நாட்கள்
பிரிந்திருக்கிறோம் வெகு நாட்கள்
திசைகளறியா பிரிவினிலும்
நினைவுகள் யாவும்
பொம்மைகளாகும்
பழகிய உருவம்
அருகிலில்லா தருணம்
5

ஊமை

விழியோடு நீர் கண்டேன் - அவள்
கண்கள் துடிக்கக் கண்டேன்!

மெளனத்தின் மொழியறிந்தவள்
என்பதையும் கண்டேன்!

பேதையவள் வாய் மூடி
கை பேசும் வித்தைக் கண்டேன்!

அக்கனம் விழியிரண்டும்
இமைத் தோகை விரிக்கக் கண்டேன்!

பாவம் என்னச் செய்தனளோ?
செவ்விதழ் விரித்து சொல்லொன்று
மொட்டுவிட வழியில்லை...
நின் நீர் தாங்க என் கைகள்
மறுக்கவில்லை...
எந்தன் அன்புத் தோழி
நீ ஊமையென்று ஊர் ஏசும்
ஆனால் அவர்களுக்குத் தெரியாது
இரு விழியும் ஈரைந்து விரலும்
பிறரறியா மெளனம் பேசுமென்று
பெண்ணே ஊனம் உன்னிடமில்லை
உனையேசும் ஊரிடமே
2

கனவு

உன் மனம் உனையறியாமல்
உறக்கத்தில் களவு போகும்!
உடலைவிட்டு உயிர் பிரித்து
நினைவுகளோடு ஓடிப்போகும்!
வேற்றுலகம் சென்று சேர்ந்து
நினைவுகள் யாவும்
மேடை போடும்!
இவையாவும் கனவுகளாய்
நீ காணக்கூடும்!
2

கண்ணீர்

நடை பழகிய
முதிர்ந்த குழந்தை
தளர்ந்த உடலுக்கு
தாங்குதல் தேடுதடா!
ஊன்று கோல் உதவியது
உன்னைத் தேடிய
குழந்தைக்கு...

உன்னைத் தேடிய
குழந்தைக்கு,
தேடியது கிடைக்கவில்லை
விழி நீர் தெரிப்பும்
நிற்கவில்லை.
2

உயிர்

நிழலாய் மாறி
கால் சேர்ந்து
நின் பாதையில்
நான் உருள்வேன்!
பெண்ணே நீ...
நிழலுக்கு உயிரில்லை
என்றாலே
உடனே நானும்
உயிர் பிரிவேன்
2

மருதாணி

நிந்தன் விரல்களும்
நாணமுற்றுச்
சிவந்து போனதோ?
இல்லையடி...
உள்ளங்கை நிலவின்று
ஐஞ்சுடர்த் தெரிக்கும்
சிவந்தச் சூரியனாய்
சுடர்விட எண்ணியே
இலை தானுதிர்ந்து
விரல்களுக்கு சாறூற்றி
காய்ந்துதிர்நதுச் சிரித்ததடி
மருதாணி
4

குழந்தை

நின் கூண்டிற்குள்
மாதங்கள் பத்து
எனைச் சிறை வைத்து
உனைப் பிரித்து
எந்தன் உயிர் தரிக்க
நீ துடித்தாய்!

எனைச் சிற்பமாக்க
நீ தேய்ந்து
சிறிது சிறிதாய்
பழுத்துவிட்டாய்.

எமன் எனையழைத்தாலும்
என்னுயிர் விட்டு
உடல் கொண்டு செல்லட்டும்
ஏனெனில்
என்னுயிர் கூட்டில்
முதிர்ந்த குழந்தை தான்
நீ எனக்கு?

முதல் கவிதை

கவிதைகள் பல
கேட்டினும் அறிந்திலேன்
இத்தகு இனிமை
மழலையின்
புதுக்கவிதை...

நான் இரசித்த
முதல் கவிதை...
3

கவிதை

மொழியின் இனிமையை
உன் மூலம் காண்கிறேன்!

வார்த்தைகளால் அழகாய்
கோர்த்து வைத்த தோரணமாய்
செய்தி ஒன்று சொல்வதற்கு
வண்ணப் பூச்சுகளால்
இட்ட கோலம்
கவிதை

இளஞ் சுடரெரித்த பாலினிலே
சொட்டுச் சொட்டாய்
தேன் சேர்த்து
இனிக்க இனிக்க வந்து
தந்த சுவையினும் சுவையுடைய
என் உயிரென
நான் எண்ணும்
கவிதை
5

தோழி

புருவத்தின் கரையோரம்
திரை நீக்கும் நிமடம் முதல்
நான் காணும் கனவு வரை
உன்னிடத்தில் சரணடையும்.

இன்ப துன்ப நிகழ்வுகள் யாவும்
எனது வார்த்தைகளாய்
நின் மனப்பதிவிற்கு
செவியோடு சென்று சேரும்.

தோழியாய் நீ இருக்கையில்
எனது நிகழ்வுகள் யாவும்
உன்னைச் சுற்றி...

இவையனைத்தும்
உன்னிடம் சேராவிட்டால்
பாரங்கள் தாங்குவதில்லை
என் இதயம்.

என்னை விட்டுதூரம் சென்றாலும்
நினைவுத் தோட்டம்
உன்னோடு நான் பகிர
தினம் தினம்
பூ பூக்குமடி,
எந்தன் உயிர் தோழி...
2

அப்பா

நின் வரவைக் காணத்தான்
பிஞ்சு மனம் காத்திருக்கும்
அரைக் குமிழி உறக்கத்தில்
திரையசைத்துக் பார்த்திருக்கும்
அன்பெனும் பொழிவிற்கு ஏங்கித்தான்
தூக்கம் கலைய
நிலா முகம் இரசிக்கும்
அப்பா...
நின் வரவைக் காணத்தான்
இந்த
பிஞ்சு மனம் காத்திருக்கும்
3

சொர்கத்திலிருந்து பேசுகிறேன்

நிலாச் சோறு சாப்பிட
ஆசை கொண்டு
நின் வயிற்றில்
விதையானேன்...

நீ செய்த தவறெல்லாம்
பாவங்கள் என்றாகி
விதைக்குள் புழுவாய்
உயிர் குடைந்து
போனதடி...

என் நிலையறிந்து
தன் மனமுருகி
நிலவும் இன்று
கண் கசிந்து
கருத்துப் போனதடி...

உலகத்தை எட்டிப்
பார்க்கும் முன்னே
வேற்றுலகம் கடத்திவிட்டாய்.

உனை பிரம்மன் என்று
நான் நினைத்தேன்
எமனாய் நின்று
கருகளைத்த காரணம் என்ன?
0

புதைகுழி

பணமெனும் புதைகுழியில்
மனித உயிர் சுகம் காணுமோ?

அன்பும் அரவணைப்பும்
மனிதா நின் நிலைக் கண்டு
எட்டிப் பார்த்து
உனையெழுப்பி கொணர்ந்து
புதுவுலகம் காட்டுதடா!

நீ அதனையும்
உள்ளிழுத்ததனால்
மல்லிகை வாடை
துர்நாற்றத்தில்
வலுவிழந்து போனதடா!

நீ வெளியே வந்தாலும்
எந்தன் சிறு கண்ணீர் துளிகள்
நின் அழுக்கை களையாது
மனித மனங்களின்
மழை அன்று வேண்டுமடா
அன்பால் நீ நனைய

திருமணம்

தட்சனை வேண்டுமாம்
பெண்ணவள் வேங்கையின்
கை கோர்க்க

பூமகள் கோளத்தை
தவமிருந்து வளர்த்தவன்
பண இச்சை பரிமாற்றம் கேட்கும்
தரங்கெட்ட கூட்டத்திற்கு
உறவு சேர்த்து வைப்பதுவோ
திருமணம்

பெண் சிசுக் கொலை

ஐயிரண்டுத் திங்கள்
கருவறைத் தாங்கிய
வலியொன்றும் பெரிதில்லைத்
தாயே...

கள்ளியரைத்து நீ தரும்
உயிருருஞ்சும் பாலை
நின் மனதோடு
கருங்கல் நட்டு
உரைந்த உயிர் வலியை
காட்டில்
0

மூக்குத்தி

மொட்டுத் தண்டு மலரின் மேலே
தேன் தேடும் மூக்குத்தி
3

உயிரற்ற பூக்கள்

செடியில் உள்ள பூக்கள் யாவும்
உயிரற்று பிறக்கிறது
உன் கூந்தல் ஏறி நின்றி
உயிர் பெற்றுச் சிரிக்கிறது
நின் கூந்தல் வாடைக் கண்டு
பூக்கள் நாணி மடிகிறது
0

சூரியப் பெண்ணே

இலைத் தட்டு மனதின் மேலே
பனிக் கூட்டம் கூடு கட்டி
சூரிய வரவைப் பார்த்திருக்கும்
நினைவுகளே...

அவள் வரவைக் கண்டவுடனே
வண்ணத்துப் பூச்சிகளாய்
சிறகடித்துப் பறப்பதேனோ?

பனிக் கூட்ட குளிர்ச்சி விரட்டி
சூரியப் பெண் கதிர்கள் யாவும்
மழைச் சாரல் தெரித்தது போதும்!

என் மனமுரைந்து என்னவளே...
சூரியப் பெண்ணே நீ
நடுங்க வேண்டாம்!

என் இரத்த மொட்டுக்கள் வந்து
மனக் கூரைக்குள் வாழும் உன்னை
குளிர் துரத்தி வெப்பம் தரிக்கும்.
2

இனிமை

நிறமற்ற நீரும் உருமாறி
கருநிறம் கொண்டது

நிலாப் பெண் சிரிப்பினிலே
மேகங்கள் நாணமுற்று
கருத்துப் போனது

நிலவழகால் ஈர்க்கக் கண்டு
நிழலாடச் செய்து
நீரும் சலனப்பட்டது

மேகக் கருஞ் சாந்தை
மரமேனோ கடன் வாங்கி
மேனி கருத்து
உயிரற்று நிற்கிறது

தலையை இடைச் செருகிய
கால்களை அணைத்தபடி
கைகள் கோர்த்தமர்ந்தவாறு
நின் நினைவுகளோடு
நீரின் சலனத்தை கலைத்தபடி
மெளனமாய் நானிருந்து
நல்லிரவைக் கழிக்க வேண்டும்

என் துணையென
நீயில்லா இரவினிலே...

சில நேரம் பிரிவும்
இனிமை தான் பெண்ணே...
4

வெற்றி

மண்ணில் புதையுண்டு
சில காலம் கடத்திவிட்டு
பச்சிளஞ் சிறகுகளை
நிலத்தைக் குடைந்து
இலைகளாய் கையசைத்து
வெளிவரும்
தளிரின் பெருமை
இதுவல்ல
நீரையுறிஞ்சி
சூரியச் சுடரிழுத்து
இளங் குழந்தையாய்
புன்னகைப் பூக்கும்
மொட்டுக்கள் தெரிவதும்
பெருமையல்ல
பெற்ற குழந்தை
வாழ்வது ஒருநாள்
எனினும்
மகிழ்ச்சியாய் மலரும்
மலர்கள் தான்
நின் வெற்றி
0

மழை

முதிர்ந்த முத்துக்கள்
உதிர்ந்து சேர்வது
நிலத்தினிலே...
மழையே

நிலத்தரைந்த
மெய் சிலிர்ப்பை
நின் சில்லொலி
சொல்லும் நேரத்தில்
மெளனமாய்
மண் சிவந்து
மணம் வீசி
வாடைத் தெரித்தது
0

கண்ணாடி

மனமென்னும் இருட்டறையில்
நினைவுகளைப் புதையலிட்டேன்
இருட்டினில் உருமாறி
நிழலுருவம் காட்டும்
ஊடுருவல் கண்ணாடிபோல்
என் நினைவுகள்
நின்னுருவம் காட்டத்தான்
2

முதல் ஹைகூ

மெளனமும் அழகு தான்
உதட்டோடு அல்ல
உந்தன் விழியோடு

குடும்பம்

ஐயிரண்டுத் திங்கள்
கருக் கல்லை
சிறை வைத்து
உயிரை உளியாக்கி
உடற் சுத்தியலால்
உயிரடித்து
நீ செதுக்கி வெளியுமிழ்ந்த
பேதையொன்று...
ஒருநாள் உனக்குப்
பெயர் சூட்டும்
அம்மா என்று...

உன்
சுட்டு விரல் நீட்டியே
நீ பெற்ற
புதுப்பெயர் போல்
தலைவனவன் பெற
ஈகைக் கொண்டு
பேதைக்கு
நீ காட்டும்
புதிய முகம்
அப்பா...

ஆசை ஆசையாய்
அருகே வந்து
தன் மடியில் பேதையை
தொட்டிலிட வேண்டுமாய்
இச்சைக் கொள்ளும்
சிறு தளிர் கொழுந்து
நீ செதுக்கிய
உயிர் பெற்ற
முதற் சிற்பம்...
0

இச்சை

இருட்டறையின்
வெளிர் ஒளியில்
மறுவுயிர் பெற
உயிர் தெரித்து
உறங்கும் நேரத்தில்
என் மெளனத்தை
காற்றுடன் கலந்து
நினைவுகள் யாவும்
இசைப் பாடும்...

இரவின் மெளனத்தை
விழித்திருந்து இரசிக்க
வேண்டுமாய் இச்சை
எனக்கு...
0

உறக்கம்

கண்கள் முன் நீளத் திரையிட்டு
கருஞ் சாந்து பூசிவிட்டு
நட்சத்திரங்களை தூவியே
நிலவென்னும் பொட்டு வைத்தேன்
இரவென்னும் தேவதையை இப்படியே
தினம் தினம் நான் செதுக்கி
ஓவியத்தை இரசித்த வண்ணம்
உறக்கமெனும் ஊர் சென்றேன்
0

கண்ணா

மூங்கிலின் சிறு விரலைத்
துளையிட்டுத் திருகிய
புல்லாங்குழல்
உன் கையில் தான்
இருக்கையில் எத்தனையழகு
அதனினும் அழகு
நிந்தன் வித்தையால்
எழும் உச்சியுந்தி
துளையிட்டுச் சென்று
மெய் எலாம் திருடும்
குறுகிய துளைச் சென்று
குளிர வைக்கும் காற்றினும்
மெல்லிய வருடல் இசை...
இதனை வேறெப்படி
நான் சொல்ல
கார் கண்ணா?
0

வருகை

ஒற்றைக் கால் ஓவியத்தை
சிதிலமடையச் செய்வது போல்
ஒலி ஒன்று கேட்டதனால்
சில்லென்று சிணுங்கும்
கொலுசு மணிகள் யாவும்
தேவதை நடப்பதாய்
சொல்லாமல் சொல்லியது.

தலைவியவள் தாழகற்றி
சுவரோடு சாய்ந்தபடி
ஏக்கத்தோடு எட்டிப் பார்த்தாள்
தலைவனவன் புன்சிரிப்பின்
மலர் பூவை மாலையாக்கி
கருங்காட்டு கூந்தலுக்கு
மணற் பரைத்து
நட்டு வைத்தாள்

தலைவனவன் வருகைக்கு
கொலுசு மணிகள் யாவும்
மெளனச் சிறை சேர்ந்ததென்ன?

காதல்

கண் சிமிட்டும் நேரத்தில்
என் மனக் கருவறையில்
மணியடித்து ஒலிக்கிறதே
நீ பேசும் வார்த்தைகள்
படிமனாய் படிகிறதே
காதலெனும் சுவற்றிற்குள்
என் மனம் புதைகிறதே!
0

சர்க்கரை நிலவு

சர்க்கரைத் தூவிய
விண் கூரைக்குள்
வட்டம் வரைந்து
வெண்ணெய் தடவி
நிலவு என்றேன்

தனிமையின் இனிமை
இது தானோ?

தனிமை இனிமை

இரவு நேரத்தில் மட்டும்
விண்ணின் வைரங்களனைத்தும்
எனக்காகக் காத்திருக்கும்
என் தனிமையெனும்
கூட்டுக்குள்
உறவாடிப் போகத்தான்

சிலிர்த்தாடும் மரமும்
காற்றையும் சில நேரம்
வழி மறித்துச்
சிறை வைக்கும்

வேறென்ன நான் சொல்ல
தனிமையும் இனிமை தான்...
0

நிலவு தேவதை

இரவினிலே எனை ஈர்ப்பதெலாம்
வெண்ணிற வெள்ளி நிலவே
சூரியன் செத்துப் போகையிலே
விழிச் செதுக்கிப் பார்பதென்ன?

மரம் அறுந்த
அடர் கருங் காட்டினிலே
நீதானே இரவின்
இராட்சசியே...
உனக்குவமை சொல்
தேவதையே...
வெள்ளிச் சுடர் கொண்ட
பால் நிலவே!
0

பட்டம்

விடியலின் வேகத்தை
உன்னை நினைகையில்
உணர்கிறேன்...

பறக்கும் பட்டத்தின்
வாலைப் போலத்
துடிக்கிறேன்...

உன்னைத் தொடும்
ஆசையில் தான்
இந்த நடுநிசி இரவிலும்
எந்தன் மனதைப்
பட்டமாக்கிப் பறக்கிறேன்

சேரும் நேரம் வருவதற்குள்
சிரித்து வளர்ந்த நீயோ
இருளண்டித் தேய்கிறாய் நிலவே

நீ தேய்ந்து கொண்டே
மனமிளிரும் தங்கத்தை
உரசிப் பார்ப்பதேன் கண்ணே
3

பூக்களின் வெற்றி

பச்சை பச்சையாய்
வெடித்து நீட்டி
விரல்களாய்
முளைத்து நிற்கும்
செடியின் துணையே
கிளையே
உனைத் தழுவியே
நின் சிகரம் ஏறி
முகம் காட்டிச்
சிரிக்கும்
மலரும் தருணம் தான்
பூக்களின் வெற்றியோ
0

புல்லாங்குழல்

உயிர் பிரிந்தும்
நீ மட்டும்
உயிர் வாழ்கிறாய்
இசையாய்

வளர்ந்த பின்பு தான்
பேதையாகிறாய்
உன் பேச்சுக்களில்
நான் மயங்குவது
ஏனோ?

இசைக்கு உயிர் தரும்
மூங்கில் வார்த்த
குயிலின் இனி குரலுக்கு
இணையாய் ஓசை எழுப்பும்
புல்லாங்குழலே...
0

ஊழியன்

இளஞ்சிவப்பு மண்
புழுதிப் புகைவிட்டு
தழலெறியும் நேரம்,
நெருப்பின் தலைமகன்
தலைச் சுழி நோக்கும்காலம்...

காலணிகளுக்கு இன்று
என் நிழலொடு உறவில்லை
கால்களே நேரிடையாய்
நிழலை முத்தமிட்டுத்
தொடர்கிறது...

கருத்த மேனியனை
எந்தன் பாட்டுடைத் தலைவனை
உப்பு நீர் வார்க்கச் செய்யும்
வேந்தனவன் சூரியனே
உன்னைப் போற்றும்
பெரியவனே
இந்த கருத்த மேனியனே
பாடுபடும் ஊழியனே...
2

பிறந்தநாள்

வருடத்தின் ஒரு நாள்
நீ கடக்கும் மைல் கல்
உன் பிறந்தநாள்

வாழ்க்கையை
கடத்திவிட்டதாய் எண்ணி
இந்த ஒரு நாள் மட்டும்
இனம் புரியாத
ஒரு இன்பத்தை ஏற்கிறாய்
உனக்கு ஒன்று தெரியாது
நீ செல்லும் பாதை
உன் இறப்பை நோக்கித் தான்
என்று...
2

உன்னைப் பற்றி...

உன்னைப் பற்றி
நான் என்ன சொல்ல...

உயிரை உரித்து
உதிரத்தை உணவாய்
உறிஞ்சும்
உன் பார்வை

இது நாள் வரை
நாம் பேசாத
வார்த்தைகளெல்லாம்
சேர்த்துப் பேசும்
உன் மெளனம்

இது வரை காணாத
திரை மறைவுச்
சித்திரமாய்
என் உருவம் காட்டும்
கருவண்டாய் போன
உன் விழிகள்

நம் நினைவுகள் அனைத்தும்
ஒருங்கே உயர்த்தி
நிழற் படம் காட்டும்
உன் புருவங்கள்

நாம் இருவரும்
ஒன்றெனக் காட்டும்
என் உயிரை விதைத்து
உதித்த குளிர் நிலவு
உன் நுதற் பொட்டு

சொல்வதற்கு வார்த்தைகள்
சிக்கவில்லை
0

பீலி

கருமேகம் கண்டவுடனே
பீலியை படரவிடும்
மயில் பெண்ணே!

நீ யுதிரர்த்த ஒற்றைப் பீலி
அம்பாய் மாறி
மனதில் சொருகுதல்
முறையோ?

பெயர்

எழுதுகோளின் விழியோடு
வழியும் மையாகிப் போன
நீர்த் துளிகள்
சில நேரம் சிரிப்பது ஏன்?
புரியவில்லை...

நகைத்த நேரத்தில்
உற்றுப் பார்த்தேன்
முத்து முத்துக்களாய்
உன் பெயர்கள்...
0

நிலாப் பெண்

புவி ஈர்ப்பை
உதரிவிட்டு
நிலவீர்ப்பை
கையகப்படுத்த
நீர்க் கூட்டம்
அலைகளாய்
பொது குழு கூட்டும்
அன்பே நீ நிலவானால்!

குளிர் கொண்ட
நீர்களனைத்தும்
காணாமற் போனதே
பெண்ணே நீ என்னவானாய்!
0

முதல் முத்தம்

அந்த நிமிடம்
உணர்ச்சிகளின் உச்சம்
நரம்புகள் அனைத்தும்
இருகிப் போகும்
செங்காந்தல் மலரின்
நிறம் கொண்ட
ஓய்வில்லா செந்நீரும்
உறங்கிப் போகும்
உயிரை சில நேரம்
உடலே உமிழ்ந்துவிடும்

காரணம்?

நீ கொடுத்த
முதல் முத்தம்

என் முதல் தோழி...

நடப்பவையாவும்
நிழலாய் மாறி
சொல்வதை ஈர்க்கும்
என் முதல் தோழி
அம்மா தான்.
0

உறக்கம்

விழியெனும் பெட்டகத்தின்
கரு நிலவாகிப் போனவளே

உன்னை நானும்
சிறை வைக்கும்
உறக்கத்தை வெறுக்கும்
பேதையாய் மாறிப் போனேனே...
0

ஒற்றை மரம்

கருங்காடு ஈன்றெடுத்த
ஒற்றைக் கால் பிள்ளையே

உன்னோடு உறவாட
ஒருவன் மட்டும் வருவானே!

வெறுமையும் உருமாறி
இசையாகிப் போவானே
காற்றென்னும் அவனே
உந்தன் காதலனே

ஒற்றைக் கால் சிலையே
நான் உன்னில்
முதிர்ந்த இலையே...
0

ஒளி

உறங்கும் நேரமோ
உயிர்விடும் நேரமோ
எனக்கே தெரியவில்லை

கனவு வரும் நேரமோ
காலன் வரும் நேரமோ
நான் அறியவில்லை

இரவு உறக்கத்தின்
குழப்பங்கள் இவை தான்
காதலெனும் சுடரொளி
ஏற்றம் கண்ட பின்பு...

எனக்கு மட்டும் தான்

இறப்பு என்பது
எனக்கு மட்டும் தான்
என் மனதோடு வாழும்
உனக்கு அல்ல

ஏனெனில்
என் மனமொரு
தாயின் கருவறை...

காலன் வந்து
என்னுயிர் கொண்டு
சென்றாலும்
பிறவா மழலையாய்
நீ எந்தன்
மனதில் என்றும்
உயிர் பெற்றிருப்பாய்...
0

ஆலயம்

உயிரைக் கிழித்து
இரட்டிப்பாக்கி
கருங்காட்டுச் சித்திரத்தை
கருவரையில்
சிலை வடித்தாய்.

சிலை உயிர்
கொண்ட நாளன்று
இன்பங்கள் கோடியாய்
ஊற்றுவிக்கும் மனதின்
கோவில் தன்னில்
தீபத்தை ஏற்கும்
கடவுள் தானே
தாயே நீ!
0

புன்னகை

முதிர்ந்த பூக்கள் யாவும்
மண்ணிற்கு முத்தமிட்டு
நகைக்கிறது?

நீ உதிர்த்த புன்னகையும்
என் மனதில் புதைந்து
மனக்கிறது.
0

கருத்த நட்சத்திரங்கள்

வானில் நான் வரைந்த
நட்சத்திரங்கள் மின்னவில்லை...!
எனக்கும் விளங்கவில்லை?
இன்று அமாவாசையாம்...
நிலவு தேவதையாய்
நீ வர எண்ணித்தான்
சிரிக்காமல் முகங்களனைத்தும்
கருங்காட்டு கலவையாய்
கலங்கிக் கொண்டிருக்கிறது.
0

தேவதை

வானத்து வனதேவதை
தன் முகம் முழுதும்
இளங் குங்குமத்தைத்
தெரித்தார் போல்
சிவந்து நிற்க
காரணம் என்ன?

விடியல் தொட்டு
நீ தெரிக்கும்
வெள்ளி கீற்றுகளால்
சிறுகச் சிறுக
அவள் நாணத்தை
சுட்டதனாலா?
பதில் வேண்டும்
ஆதவனே!
0

வெள்ளி கயற்கள்

செல்லுமிடங்களில்
வைத்த சுவடுகள் எலாம்
குளிரோடை குளிர் நீரின்
வெள்ளிக் கீற்றுகளாய்
விரும்பி விளையாடும்
கயற்களாய் மாறிப்போன
எந்தன் நினைவுகள்...
0

சிறகொடிந்த பறவை

நீரோடு உறவாடி
நீந்தி வரும்
அன்னமே
நிந்தன்
அழகை கூறும்
சிறகிரண்டும்
என் மனதிற்கு
தானம் வார்ப்பாயோ?
என்னவளை கண்டதால்
ஒற்றைக் காலில்
நர்த்தனம் செய்யும்
பச்சிளம் புற்கள் போல
என்னுடனே
சிறகொடிந்த பறவையாய்
சிறை செய்து கொண்டதே
0

உடைந்த நிலா

வீட்டின் தூணை
அனைத்த படி
குளிர் சிரிப்போடு
நீ சிந்திய
சிறு வெட்கம் கண்டு
நிலவு ஆயிரமாய்ச் உடைந்து
நட்சத்திரங்களாய் மின்னுதடி
0

உதிர்ந்த பூக்கள்

அள்ளித் தெளித்து
முகத்தில் படர்ந்த
நீர் மொட்டுகள்
முத்தமிட்டு உதிர்ந்தது

நிந்தன் நிலவு
முகத்தின் கலங்கத்தை
விளக்கி உதிர்ந்த
நீர்ப் பூக்கள்
எந்தன்
உயிர் வேர்கள்
0

காகிதப் பூவில் தேன்

ஈறாரு வருடங்கள்
பொறுத்திருந்து பூக்கும்
குறிஞ்சியும்
உனைக் கண்ட மறுகனம்
நகைத்து முகம் சிவக்கும்

நீ கடக்கும் காரணத்தால்
வழியோரம் வசந்தம் வீசும்
காகிதப் பூவும்
தேன் வடிக்கும்
0

காகிதப்பூ

மலர்ந்த பின்
மண்டியிட்டு மரணத்தைத்
தழுவும் மத்தாப்பு
மகிழ்ச்சியோடு
முகமலர்ந்த மல்லிகைக்கு
நாட்கள் ஒன்று தான்
உன்னை அத்துடன்
உவமைச் சொல்ல
மனமில்லை கண்மணியே
ஏனென்றால் நீ
வாடாத என்னுயிர்
கொண்டு மலர்ந்த
காகிதப்பூ

மீட்டாத வீணை

தேவதைகள் வந்து
மீட்டிய வீணையின்
ஓசையோடிணைந்த
ஒலியின் அழகினை
நீயில்லா நேரங்களின்
என் மனதில் நான்
உணர்ந்தேன்,
உந்தன் நினைவுகளாய்
தனிமையிலே.

உன்னோடு நானிருந்த
ஒவ்வொரு கனமும்
மீட்டாத வீணையாகிப்
போனேனே!
0

சிற்பியாய் சில நேரம்

உன்னை எந்தன்
மனதோடுபனிச் சிற்பமாய்
செதுக்கவே
ஆசைக் கொண்டேன்.

எண்ணத்தை உளியாக்கி
சிற்பியாக நானானேன்.

உன்னைச் செதுக்க
உளியிடம் வார்ததைக்
கேட்டேன்...

என் மனதோடு
நீ இருப்பதையறிந்து
உளி தன்
விழியோடு நீர் வடிக்க
நானதை முத்தமிட்டேன்.

காதலியின் முதல் தொடுகை

ஒரு கனம்
ஒரு ஊடுருவல்
சிதைந்து போனதாய்
உணர்ந்தேன்
உண்மை என்னவென்பதே
விளங்கவில்லை
அன்பென்னும் அலையை
உள்ளிழுக்க
நீ செய்த சதி தானே?
நான் முதன் முறையாக
உணர்வுகளால் உன்னை
உணர்ந்த கனம்
உந்தன் விரல்
என்னோடு உறவாடிய
தருணம்
0

உயிர் வெடிப்பு

உனைக் காணும்
ஒவ்வொரு கனமும்
எந்தன் உயிர் வெடித்து
ஒட்டிய உணர்வுகள்
தோன்றுகிறதே கண்மணியே

மனமெனும் மாயை

நீயில்லா நேரத்திலே
வானில் துளி இடமின்றி
நிலவடைத்தது போல்
நிந்தன் நினைவுகள்
என் மனதில் குளிர்ந்த
பெளர்ணமியாய் நிறைந்தது
என்ன மாயமடி?
0

பதில்

வேரறுந்த மரத்தின்
வேதனையை யாரறிவார்
நீ இல்லா நேரத்திலே
உயிரறுந்த மரமாவேன்

என் துயர் துறக்க
நீ ஒன்று செய்வாயோ?
உன்னோடு நானும்
என்னோடு நீயும்
உயிரை மட்டும்
உடல் மாற்றிக் கொள்வோமா?

பதில் வேண்டும்
காதலியே...
0

சிவந்த சூரியனே

நான் செல்லும் பாதையில்
நிழலாக நீ வந்தாய்
என்னைச் சுற்றி நீ நின்றாய்
பகலில் நீ நிழலானால்
இரவில் என்னாவாய்
எந்தன் விழி நீர்த் துளியே?

ஆதவன் சிவந்துச் சுருங்கி
நிலவாகின், நிழலான நான்
நீயாவேன்.
0

அர்த்தம்

உன் வார்த்தைக்காக
எந்தன் வரிகள்
காத்து நிற்கும்
அர்த்தம் சேர்க்க...
0

வெற்றிடம்

என் வாழ்க்கையின்
வெற்றிடத்தை களையெடுத்து
இன்பத்தைப் பயிரிட வந்த
தேவதையே...
நீ செய்த அறுவடையில்
சிக்கியது என்ன?
0

வைரம்

விண்ணிற்கு வைரமாய்
நினைவுகள் மின்னும்
நட்சத்திர வானின்
அமாவாசை இரவு
என் மனம்.
0

காலணி

நீயின்றி எனக்குள் நானே
தனியாய் பேசும்சிறு கனமும்
என்னோடு நானே
செல்லறித்துப் போனேனே...

என்னைச் சுமந்து செல்லும்
காலணி கூட வலியறியாது
இந்த வலியை உனக்கு
என்னால் சொல்லவும் முடியாது?
0

கவலை ஏதுமில்லை

சந்தனமும் சிவந்து போனது
நீ சிரிக்கும் சிரிப்பைக் கண்டு!

நிலவும் சிறு நேரம் சுருங்கி
அமாவாசை ஆனதே...
இருப்பினும்
நிலவுக்கு மாற்றாய்
விடியல் வரை
நீ இருக்க
எனக்கு கவலை
ஏதுமில்லை
0

புதையல்

நீ பேசும் வார்த்தைகளெல்லாம்
என்னுள் புதைந்த புதையலடி
காலங்கள் சென்ற பின்னால்
அத்தனையும் பொற் குவியலடி.
0

காது

என் காதுகளின் ஓரமாய்
குளிர் காற்று வீசுதடி
நீ விடும் மூச்சுக் காற்று
காற்றோடு கலப்பதனால்.
2

என் எண்ணத்தில் நட்பு என்றால்

என் வாழ்க்கையில்
நான் எனும்
வார்த்தைக்கு
ஒற்றையில் ஒற்றுமை
என வேறொரு அர்த்தம்
காணச் செய்த
மந்திர வார்த்தை
நட்பு
0

மொட்டுரிந்த பூக்கள்

மொட்டுரிந்த பூக்களும்
மொட்டுக்களாய் ஆனதடி

ஏன்?
சூரியனைக் கண்டு
வணக்கம் கூறத்தான்
மொட்டவிழ்நதது...

நீ வந்ததைக் கண்டு
நிலவு இன்னும் உறங்கவில்லை
என்று மீண்டும்
மொட்டாய் சென்று
உறங்கிவிட்டது.
0

விடியல்

ஆதவன் உதயமாகும்
மலைகளா உன் விழிகள்...
நீ இடும் நுதற் பொட்டுக்கு
நான் வைத்தப் பெயர் தான்
ஆதவன்!
விடியலாய் நான் கண்டது
உன் முகம் தான்.
0

விரல்

என் விரல் நுனியில்
எட்டிப் பார்க்கும்
நகத் திரையிலும்
நிழலாய் ஆடும்
மெய் பிம்பம் நீயடி...
0

பெண்?

உன் உயிர் கொண்டு
வேறு உயிர் தரும்
உன்னை நான்
என் சொல்வேன்...
பெண்ணே
நீ வாழ்க!

கடிகாரம்

உன்னோடு நானிருக்கும்
நேரங்கள் மட்டும்
மிக வேகமாய் சுழன்று
வெறுப்பை உமிழும்
கடிகாரம்
0

வினோதம்

நின் நுதற் கொண்ட
சிறு பொட்டும்
என் பெயர் சொல்லும்!

அதை நான்
எப்படி சொல்வேன்
என் பெயரும்
வினோதம் தான்
உன்னைப் போல...
0

சரித்திரம்

புதுமை என்னும்
புத்தகம் எது?
நீயும் நானும் மட்டும்
நினைவுகளாய் தவழும்
ஒற்றை ஏடு
சரித்திரம் தான்...
0

கனா

உன் விழிக்
கருவின் திரையிலே
நான் வந்து
கனா காண்கிறேன்

திரை மறைவில்
தோன்றுவதென்ன?
நினைவுகளாய்
நித்தம் நித்தம்
பூப்பறக்கும் கனவுகள்...
0

ஏன்?

இரவினிலே உனைக் காணுகையில்
நிலவங்கே ஒழிந்திடுமே
நினைவுகளாய் வருகையிலே
நெஞ்சமெலாம் நிறைந்திடுமே
நான் என்னைப் பார்க்கையிலே
நீ மட்டும் தெரிவது ஏன்?
2

நீ

வார்த்தைகளைப் பயிரிட்டேன்
கவிதைகளாய் நீ முளைத்தாய்
வண்ணங்களைச் சிதறடித்தேன்
ஒவியமாய் நீ தெரிந்தாய்
கற்களைக் குடைந்து பார்த்தேன்
சிற்பமாய் நீயமைந்தாய்
கண்களால் காண்பவை எல்லாம்
இரவின் அழகாய் நீ இருந்தாய்
0

நட்பு

நட்பு என்னும் நறுமுகையின்
வாடைக் காற்று வீசுகையில்
மனமென்னும் ஓடையிலே
தத்தளிக்கும் படகினிலே
படர்நிலவாய் வந்தது என்ன?

நினைவுகள் தான்...
நான் பிரிய மனமில்லாமல்
சிறு நீரும் ஒழுக
பிரிந்து வந்த நட்பின்
நினைவுகள் தான்
அதை எங்கனம் மறவேன்
0

உன்னை எண்ணி

தோட்டத்தில் பூக்கள்
கண்டேன்
சிதறிக் கிடந்தன
ஒவ்வொன்றும்
ஒரு நிறம்...
என் நினைவுகளும்
அப்படித் தான்
எண்ணங்கள் வேறுபடும்
ஆனால் அனைத்தும்
உன்னை எண்ணி தானடி
0

பூக்கள் கூட்டம்

மஞ்சள் நிறப் பூக்கள் கூட்டம்
மனமகிழ்ந்து உனைக் காட்டும்
காரணம் கேட்டுக் காத்திருந்தேன்!
என்னவளை கண்டு அதன்
கண்கள் கொள்ளை போனதாம்
0

நீ செல்லும் பாதை...

நீ செல்லும் பாதை எங்கும்
என் நினைவுகள் என்னும்
பூ பூக்கும்
பூத்தப் பூக்கள் எலாம்
என் மனதோடு மழையாகும்
சிறு துளியும் தெரிப்பதில்லை
நினைவுகளை உணவாய்
ஏற்பதனால்...
0

இலைகள்

உன் விழிகளுக்குள்
மெளனமெனும்
மொழியதற்கு
உயிர் கொடுக்க
வரிகளாய் இளங்கொடி
படர்ந்திருக்க...

அன்பெனும் காற்றினிலே
வரிகள் முற்றியே
கவிதைகளாய் மாறிய
இலைகள் உதிர்த்திடவே
எனை வந்து சேர்கிறதே!

சேர்ந்தவை கூட்டமிட்டு
உயிர் பெற்று
மீண்டுமிங்கே படர்கிறதே!
இன்பங்கள் தெரிக்கிறதே...
0

பூ பூக்கும்...

கண்கள் கானும்
காட்சிகளெல்லாம்
கனவாகும் நிலை
எனினும்
நீ வந்து செல்லும்
நேரம் மட்டும்
என் மனதின்
நினைவுகளாய்
பூ பூக்கும்...
0

வரிகள்

காற்றின் அலையில்
உன் விழியின் வரிகள்
வெற்றிடத்தை நிரப்பும்.
என் வேதனையின்
துயர் நீக்க மயிலிறகின்
மென்மையாய்
என் மனதை வருடும்
நிந்தன் காற்றிடத்தே
அனுப்பிய வரிகள்!

கருமேகத் திரை

இமை எனும் இறையை
விழியாகி வணங்கவில்லை
ஏனெனில்
உன்னுடன் நானிருந்த
நாழிகையில்
சிறு கனம் விழியைத்
திரையிட்டு கருமேகக்
கனவாகியது
திரையிட்டது சிறுகனமே
எனினும்
நிலைகுலைந்து துகள்களானேன்

இரவில் மட்டும்
நான் வருந்தவில்லை
நீ என்னுடன் இல்லாமல்
இருப்பதாய் காட்டும்
வெள்ளித் திரையாய்
இமைகள்
கனவுகள் தருவதால் தான்
0

பஞ்ச வர்ண கனவுகள்

என் நெஞ்சில்
பஞ்ச வர்ண கனவுகள்
வண்ணத்துப் பூச்சிகள் கூட
இப்படி சிறகடித்துப் பார்த்ததில்லை
இன்பங்கள் இன்று
துளிர்விட்டுத் திரிகிறதே!
0

நகைக்கிறதே...

இளஞ் சூரியன்
எட்டிப் பார்க்கையிலே
ஒடும் நீர்க் கூட்டம்
முகம் சிவக்கிறது.

நீ எனைக் கடந்து
போகையிலே
என் நினைவுகள்
நகைக்கிறதே?

இரண்டாம் நிலவு

நட்சத்திரத்தை நான் பரித்து
உனக்குத் தர எண்ணியே
கார்முகிலை கடன் கேட்டேன்
முகிலினங்கள் தடுத்தது
நிலவின் அருகில் நிற்க
பயந்து தான் நான்
நட்சத்திரத்தை சிதறடித்தேன்
மீண்டும் அவைகளை
அருகில் கொண்டு செல்வது
முறையோ? தகுமோ?
0

நட்சத்திரம்

என் மனமெனும்
கார்முகிலின் நினைவுகள்
சுடர்விடும் நட்சத்திரம்
ஒவ்வொன்றும் உன்னுடன்
நானிருந்த நேரங்கள்
0

இளஞ் சூரியன்

ஆயிரம் ஆயிரம் கருநதி
உன் கரு நீளக் கருங்கூந்தல்
கலங்கமில்லா வெண்ணிலவு
நின் முகத்தின்
தடகத்தில் ஓர் அதிசய
பூ தான் நிந்தன்
செவ்விதழ் செந்தாமரையோ
பரந்து விரிந்த வானின்
இளஞ் சூரியன்
நின் நுதற் திலகமோ...
0

சிகரம்

மலைச் சிகர
உச்சிக் குளிர்மை
போல்
என் மனமும் சற்றே
அந்நிலை எய்தியது
அன்பெனும் பனிமழையை
நீ எந்தன் மனதோடு
பொழிந்ததனால்

மேலும் மேலும்
குளிர்கிறதே
நெஞ்சுக்குள்
பனிச் சிலையாய்
நீ இருப்பதனால்
0

கரு முத்து

கல்லாக அவன் படைத்தான்
உளியாகி என்னைச் செதுக்கினாய்
அன்பெனும் பேரமுதப் பொழிவை
ஒரு கனமும் நிறுத்தவில்லை
உன் விழிக்கூட்டின்
கரு முத்தாய் திரையிட்டு
எனைக் காத்தாய்
தாயே உனை எங்ஙனம்
நான் போற்ற?
0

கருஞ் சூரியன்

வெள்ளி மேகத்திற்கு
பொட்டு வைத்தேன்
கருஞ் சூரியன்
என்றே சொன்னேன்
திரையிட்டு
மறைத்து வைத்தேன்
என்னவள்
உறங்கிப் போனாள்...

திரையிட்டது
அவள் விழிகளுக்கு
கருஞ் சூரியன்
உறங்குவதற்கு!

பிரம்மன்

பிரம்மனுக்கு நன்றி
நவில்வேன் உனைபடைத்ததற்கு
இருப்பினும்
அவன் மீது கோபம்
எனக்கு
காலமெனும் காலனை
காரணமின்றி
கரு விதைத்ததற்கு
2

சிறை

உன் வார்த்தை
சங்கீதக் கீற்றுகள்
தெரிக்கும் புதுக்கவிதை
விணையின் நாதமும்
உன் வார்த்தைக்கு
செவி மடுக்கும்
காரணம் கேட்டால்
எனை அக்கனமே
சிறையெடுக்கும்
0

காதலன்

உன் விரல்கள்
விளையாடும்
புது யுகக் காதலன்
சங்கீதம் உட்கொண்ட
பாடகன்
உனைப் புகழ் பாடும்
கவி எனக்கு
சிரம் தாழ்த்தும்
என் நண்பன்யாழெனும்
இசைஞன்
0

புல் நுனியில்...

விடியலின் நீர் துளி
பச்சை புல் நுனியில்
முத்தமிட்டு காதோடு
கவி பாடும் காலை...

உன் குழி விழுந்த
கைகளில் முத்தமிட
காற்றோடு உனக்கு
கடிதம் வரைந்தது.

நீயும் குவிந்த கைகளில்
நீர் துளியை தானம்
பெற்றாய்.

நானும் உன்
மனதை வெல்ல
யாரிடம் கவி பாடுவேன்.
0

நீ நுழைந்தாய்

சுடும் சூரியனைக்
கடன் வாங்கி
ஓடையினும் குளிர்மையாய்
மனதின் பனிமழையாய்
வெண்மையை படரவிடும்
நிலவினும் மென்மையாய்
என் மனதில் நீ நுழைந்தாய்
0

உன்னை எண்ணி

இருளை நோக்கி
மாலை நேரம்
செல்ல செல்ல
உன் நினைவுகள் என்
நெஞ்சில் வளர்பிறை தான்

கருங்காட்டு நிலவு

உனைக் கண்டு
கொஞ்சம் கொஞ்சமாய்
என் விழியிரண்டும்
தேய்கிறது
கருங்காட்டு நிலவைப்போல்...
6

தாய்

உனக்கு உவமைகள்
தேவையில்லை
நீயே உவமையாகிறாய்!
அன்பெனும் மழையும்
நிலவாய் அரவணைப்பும்
குளிரோடையென எனைச்
சுற்றி உந்தன் நினைவுகளும்...

போதும் போதும்!
வரிகள் சிக்கவில்லை
வார்த்தை தேடல்கள்
நிற்கவில்லை...

எதைக் கொண்டு நான்
உந்தன் பெருமை கூற...

தாயே பிறவியால்
நான் உனக்கு சேய் தான்
ஆனால்
நான் பொழியும் அன்பால்
நீயும் எனக்கு சேய் தான்
0

வருத்தம்

உன் விழியோடு வழியும்
சிறு தூரலும் சில நிமிடம்
என்னைச் சிதறடிக்கும்.

என் செவியை சிறையெடுக்கும்
உன் சிறு அழுகையும்.

அன்பே உன் மனதோடு
எண்ணத்தை கடனாய்
கொடுப்பாயா
உன் வருத்தம் என்னோடு
போகட்டும்
ஏனெனில் என் விழியின்
உனது கண்ணீருக்கு
எனது விரல்கள் பதிலளிக்கும்!
0

உயிர் + உடல் = ?

வாழ்க்கை ஓர்
நீரோடை
இதை உணர்ந்தேன்
நிலவெட்டிப் பார்க்கயிலே.

என் உயிர்
குளிரோடையிலே
மெல்லிய
வாடைக் காற்றிலே
படகேறி
கரையோடு
உறவாடிக் கொண்டிருந்தது...
உடலோடு உயிர்
சேரவே...

உன் மனம்
பச்சிளம் கதிரை
முத்தமிட்டு அலையாடி வரும்
இளங் காற்றோடு
வந்து
உடலோடு உயிர் சேர்வதை
என் மனம் மட்டும்
உயிர் கொண்டு கண்டதடி
மனதோரம் இன்பம்
மொட்டவிழ்ந்து
மலர்ந்ததடி
0

உண்மை

பூவின் மென்மையை
உணர்ந்தேன்
என் மனதின் ஆழத்தில்
ஊடுருவிய உன்
மெய் பிம்பத்திலே...

அக்கனமே ஓர்
உண்மையை உணர்ந்தேனே;

நான்
உயிரற்ற உடலாய்
அலைவதாய்...

உன்னை
எந்தன் உயிரை
ஏற்றுச் செல்லும்
ஊடகமாய்...

உயிர்

சிலையாக உனை நான்
உளியாயிருந்து செதுக்கவே
நித்தம் நித்தம் ஆசைக்கொண்டேன்...

சிறு நொடி என்னுயிர்
என்னிடம் இல்லையடி
இதைக் கேட்டு நீ
சொன்னதைக் கண்டு!

சிற்பியாய் நீ இருப்பின்
என்னுயிராவது யார்?
0

சரிகமபதநி...

ப்தம் சிறியதாய்
ரி... ரி... என ரீங்காரமிடும்
ரு வண்டு
யங்கித் தான் போனதே!
சியாலல்ல;
ங்கத் தண்ணீராய் பதுங்கிய
நின்னைத் தேனெனப் பருகியதால்!
0

பட்டறை

என் விழியால் சூழப்பட்டு
மூலையெனும் படச்
சுருளிள் சுழற்றப்பட்டாய்...
இமை மூடி
உன்னை என்னுள்
வீழ்த்திய கனமே
நெஞ்ச மெனும்
பட்டறையில்
மெய்யான பொய்மையாய்
நிழற்படமானாய்!
எந்தன் நினைவுகளாய்...
0

நிலவு

ஒளியை இரவல் வாங்கும்
இரவுப் பெண் நீயே!
வெள்ளிச் சுடரே...

நீ யாரைக் கண்டு
உருகித் தேய்கிறாய்
என்பதை எனக்கு மட்டும்
சொல்லடி...

அவள்
உன் போல்...
என் மனதிற்கு
ஒளியூட்டும்
தேய்தலறியா
பெளர்ணமி
வெளிர் நிலவாய்
நினைவுகளோடு
விளையாடும்
என்னவள் தானென்று.
0

மழை

நின் விழித் திரை
எனக்கு வழிவிடுமோ
உன் கருமணியில்
நிழலாட...

நின் மனதோடு
மழைவருமே
நான் அங்கே
வருகையிலே!

வேதனை

வண்ணங்கள் விலகிப்போய்
துளிகள் உன் விழியோடு
உறவாடுவதேனடி
நின் கருமணியில்
கண்ணின் நீர்த்துளிகளுக்கு
இடமில்லையோ பெண்ணே
நான் அங்கு வசிப்பதால்...

எனக்கு
நிந்தன் கருமணியில் நிழலாடும்
உருவம் கூட விழியின்
வேதனை தான்...
ஆகையால்
இக்கணம் முதல்
விழியோடு திரையிட்டு
உறவாடும் இமையாவேன்
நான்!
0

பாதைச் சுவடு

இளங்காலை வேலை
காதோடு மொழி பேசும்
மெல்லிய வாடை காற்று
வீசுகையில் நான்
வெண்மணலோடு
உறவாடிச் சென்ற
பாதைச் சுவடுகளும்
உன்னைச் சரணடையவே
காத்துக்கிடக்கின்றன...

என் கண்மணியே
நீ வரும் நேரம்
நிலவு வரும் காலம்
என்னக்குள்ளே மெளனமாய்
பேச வேண்டும்...
0

முதல் கனவு

சல சலப்பில் சிக்கிச்
சலனப்படும் கடல் நீரும்
சிவந்து நிற்கும் நேரம்
ஒற்றைக் கண் கொண்டு
கீற்றுகள் சிதறிச் சிரிக்கும்
இக்கணம் பகலவன்
பட்டாடை விரித்தத் தருணம்
நீ சோம்பல் முரிக்க
நான் காணும் முதல் கனவு
0

அகராதி

உன் முடிவென்னும் வார்த்தைக்கு
என் அகராதியில் புதிய
விளக்கம் கண்டுகொண்டேன்
அதை என் இறப்பென்று
அர்த்தம் கொண்டேன்.
0

பறவை

அன்பே வெகு தூரத்தில்
சிறகடித்துப் நீ பறந்தும்
என் மனம் முழுதும்
அலையாய்
உன்னை மட்டும் தானடி
வட்டமிட்டுத் திரிகிறது...

இதைக் கண்டு என் மனதோரம்
ஒரு வினா
துளிர்விட்டுத் திரிகிறது
பறவை என்பது
நீயா? நானா?
இருவரும் இல்லையடி
அது என் மனம் மட்டும் தானடி
0

கரு நீல மயில்

அழகாய் அழகழகாய்
வண்ணங்கள் எண்ணங்களாய்
நினைவுகளுக்கு
உயிர் கொடுக்கும்
கரு நீல மயில்
என் கனவுகளை
தோகையாய் கொண்டு
ஆடுகிறது...

உன் நினைவு அலைகளின்
மழை பொழிவை
முன்பே அறிதமையால் தான்
இந்த இன்பத் துாரல்கள்...
0

நீ ஒரு கவிதை

கவிதையின் கருவறைக்குள்
வெகு நேரம் காத்திருந்தேன்
கவியாகி கவிதையாய்
உனைப் பார்த்திருந்தேன்
உன் விழியை நான்
காண இமை எனும்
தாழ் அகற்றி
மெளனமாய் போர் தொடுக்க
என்னுள் வாராயோ...

வெறுமையை விளக்கி
என்னுள் உனை
அச்சேற்றி போவாயோ...
2

கவிதை

கவிதைகளை களவாட
வரவில்லை நான்
இரசனையின் சுவையுணர வந்தேன்
படைப்புகளை பகிர்ந்துகொள்ள
உறவுகள் பிறந்திட வேண்டும்
உங்கள் உயிர்களை
இங்கே ஊற்றுங்கள்
கவிதைகள்
0

வாழ்க்கை யேடு

நீரோடை சலசலப்பில்
வாடை காற்று வீசுகையில்
பச்சை பற்கள்
கருத்ததாய் தோன்றும்
கார்முகிலும் தன் தோகை
விரித்துச் சிரிக்கும்
நேரம் இவ்விடம் நீ
இருந்தால் போதுமடி
வாழ்க்கை யேட்டை
முழுவதுமாய் சுவாசித்து
மூடியதாய் தோன்றுமடி
3

பிரிவு

நட்பின் பிரிவில்
வேதனையும் சுகம் தான்
காதலின் பிரிவில்
ஊடலும் சுகம் தான்
உன்னுடைய பிரிவில்
நானும் சுகம் தான்
இது ஏனோ
என் உயிர் உன்னிடம்
இருப்பதனாலோ
உடலோடு ஒன்றியிருப்பது
உயிர் தான்
என்னோடு ஒன்றியிருப்பது
நீ மட்டும் தானடி
0

குளிறோடை

மனதோடு குளிறோடை
சிலிர்த்துச் செல்லும்
இவ்வேலை
நீ என் நெஞ்சில்
தூரமாய் விளையாடும்
ஒரு பகடை
0

மழைத் தூரல்

வெள்ளிக் கீற்றுகள்
விழியிரண்டில்
வீணை மீட்டி
எனை வதைத்தாய்
தாமரை இதழ்களின்
இராகம் பாடி
எனை அழைத்தாய்
கண்மணியே கார்மேகம்
கருங்கூந்தல் காற்றுடன்
மொழி பேசும் வித்தையை
கண்கொண்டேன்
விழியோடு விளையாடும்
வெறுமை கற்றுக்கொண்டாய்
வாட்டியது போதுமடி
என்னை உன் மனதின்
மழைத் தூரலாய்
தெளித்துக் கொள்ளடி

கற் சிற்பம்

கற் சிற்பமும் சிறகடிக்கும்
கண்மணியே உன் விழியிரண்டும்
மொழி பேசினால்
நானே தான் அச்சிற்பி யெனில்
என் விழியே உளியாகுமோ
0

விண்மீன்

வெண்ணிலவில் வாடை தேடும்
விண்மீன் நானோ
உன்னிலே என்னைத் தேடும்
பேதை தானோ
நினைவுகள் தன்னில்
நித்தம் நித்தம்
நின்னை மனதில்
நிறுத்திக் கொள்ள நானும்
எண்ணியது சரிதானோ
0

வெண்பனி

கண்ணிலே கார்மேகம்
திரையிட்டுத் திரிகிறதே
உனை கண்டு என் மனது
சிறகடித்துப் பறக்கிறதே
சேருமிடம் தெரியாமல்
காற்றிலே அலைகிறதே
வெண் பனியும்
எனை தொட்டுத் தொலைகிறதே
இவ்வாட்டம் கலைய
திரை விலக்க வருவாயோ
என் மனம்வருடிப் போவாயோ
0

மழைத்துளி

துளித் துளியாய் மழைத்துளியாய்
என் செவியிரண்டின்
கருந்தாழகற்றி நீ சிந்திய
மழைத்துளி தான்
தேனருவியாகிய கவித் துளியோ
2

சிற்பி

சிற்பங்கள் செய்வதை
செயலெனக் கொண்டேன்
நான் சிற்பியல்ல
என்பதை கண்டேன்
வலி தாங்கிச் சிரிக்கும்
கற்களுக்கு சொன்னேன்
நீ இன்று நானானால்
என்னை நீ சிதைப்பாயோ?
2

முத்தம்

கன்னத்தில் கடன் வாங்க
காற்றுக்கோர் கவிதை சொன்னேன்
கண்களுக்கு ஒளியூட்ட
கண்மணியாய் உனை வைத்தேன்
விழியிரண்டும் வைரங்களாய்
வெள்ளிக் கீற்றுகள்
நகைத்தனவே...

என்னுயிரை இமையாக்கி
என்னுள் உனைச்சிறையிட்டேன்

வண்டு

தேனைக் களவாடும்
வண்டாய் பிறந்திருந்தால்
தேன் கொண்ட பூக்களாய்
இருக்க வேண்டுமாய்
தவித்திருப்பேன்...
0

சிறுமுல்லை

வெள்ளி மலர்கள்
வெளிச்சம் தரும்கார்
முகில் நகைக்கும்
நேரமிது வாடைகாற்று
எனை வருடிபோகிறதே
மனம் குறைவின்றி
முதலாய் ஞாலம் காணும்
சிறுமுல்லைப் போலவே
நிறைந்திருப்பது நினைவுகள்
சின்ன சின்ன கனவுகள்
அனைத்தும் உனையன்றி
வேறில்லை...

நினைவுகள்

நினைவுகள் மின்னும் விளக்குகள்
சலனமில்லா நீரோடையில்
தத்தளிக்கும் படகு
நீரேற்றி போகும்
அக்கனம்
நெஞ்சம் கொஞ்சம்
கொஞ்சி கொஞ்சி பேசும்
நினைவுகள் மின்னும்

மொட்டு

வீசிய குளிர் காற்று
செவியோடு கவி பேசிபோன
தேநீரோடைக் குளிர் நீரை
சலனமின்றி மொட்டெடுத்து
மகிழ்ந்தேனே
என்னுள் உனைத் திணித்து
நனைந்தேனே...
2

வெண் மல்லி

மல்லிகையும் உன் மனமும்
வெள்ளை தான்
அதைக் கண்டு போகும்
என் மனம்கொள்ளை தான்
உன் போல் அதுவும் சிரிப்பதனால்
என் விழியோடு
அதை வைத்துப்பார்த்திருப்பேன்
பெண்ணே நீ எனைக்
கண் கொள்ளவில்லையாதலால் என்
விழியோடு வாழ்வளிக்கிறேன்........