புதைகுழி

பணமெனும் புதைகுழியில்
மனித உயிர் சுகம் காணுமோ?

அன்பும் அரவணைப்பும்
மனிதா நின் நிலைக் கண்டு
எட்டிப் பார்த்து
உனையெழுப்பி கொணர்ந்து
புதுவுலகம் காட்டுதடா!

நீ அதனையும்
உள்ளிழுத்ததனால்
மல்லிகை வாடை
துர்நாற்றத்தில்
வலுவிழந்து போனதடா!

நீ வெளியே வந்தாலும்
எந்தன் சிறு கண்ணீர் துளிகள்
நின் அழுக்கை களையாது
மனித மனங்களின்
மழை அன்று வேண்டுமடா
அன்பால் நீ நனைய

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக