0

பொய்மையும் வாய்மையிடத்து

 


பிழை நீங்கி,

 பிறந்திருந்தால்…

பிறர் தயை நாடாது,

 பிழைத்திருப்பேன்…

என்ற…

பிதற்றல்கள் யாவும்…

 பொய்மையே!

0

மாய வினை!


யான் யாக்கை யாதென்று,
யான் கூறாது,
யாவரும் அறிந்திருக்க,
யான் செய்வது,
யாதென்று இயம்புவாய்!

யான் என்று ஏதுமில்லை…
யாக்கை என்பது பொய்மை நிலை…
யார் யாது செய்வதென்பதை,
யாரும் அறியாதிருப்பதே,
யாவருக்கும் அவன் விதித்த,
மாய வினை!

0

கதைப்போமா

 




காதுகள் அறியும்,

 மொழியன்றி...

கண்களும் அறியும்,

 மொழியதனில்...

கைகளே கவிபாடும்,

 கவித்துவத்தை...

கதைப்போமா...

 கதைப்போமா...

0

கண்ணீரே...

 


இன்னல்களின் இனிமையும் நீ,

இன்பத்தில் இழிப்பதுவும் நீ,

இமைகளின் இயற்றலும் நீ,

இமைகள் இழப்பதுவும் நீ,

இவன் இதுவென இயம்புவதும் நீயே...

கவிதையாய் கரையும் கண்ணீரே!

0

நான் பிழை...


 ஆண்:

நான் பிழை...

உன் மெய் எனும்,

உண்மையில் சிறு பிழை...


நீ மழலை...

என் மீது விரலால்,

தவழும் மழலை...


பெண்:

வார்த்தை மழையினில்,

எனை நனைத்தது போதும்...

இவை என் விழியினில்,

முத்தங்கள் பதித்து,

வரைந்த கவிதைகள் போலும்...


ஆண்:

அழகியே...

நீயே என் கவிதை...

வார்த்தைகள் அதற்கு தேவையில்லை...

நான் உதிர்பதெல்லாம்,

உன்னிடமிருந்து பறித்த மிச்சங்களை...


பெண்:

என்னை மொத்தமாய்,

களவு கொண்ட கள்வா...

மீதமிருக்கும் அனைத்து அன்பையும்,

களவு கொள்ள வருவாய்...


ஆண்:

நான் பிழை...

உன் மெய் எனும்,

உண்மையில் சிறு பிழை...


நீ மழலை...

என் மீது விரலால்,

தவழும் மழலை...