கருவறைக் காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருவறைக் காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இவளும் ஒரு தேவதை...
இவள்...
கண்களுக்கு புலப்படாது,
விண்ணுலகில் திரியும்,
மாயமாய் மறையும்,
தேவதை இல்லை...
என் மனதிற்குள்,
என்றும் திரியும்,
அன்பை மட்டுமே,
என்னுடன் பகிரும்,
அம்மா என்னும்,
அழகிய தேவதை!
இது எத்தனை புள்ளிக் கோலம்?
ஒவ்வொருவரும் வரையும் கோலங்களில்,
அவரது ஞாபகங்களை எல்லாம்,
ஆங்காங்கே புள்ளிகளாய் வைத்து...
அன்புடன் இன்பத்தையும் துன்பத்தையும்,
அவற்றுள் வண்ணங்களாய் இட்டால்...
தெரிவதெலாம் தாயின் முகமே!
எனக்காக எல்லாம் எனக்காக...
உன் கண்களின் சாரலில்,
நீ நனையும் பொழுதெலாம்,
என்னையும் நனைத்துவிடுகிறாய்!
அழகிய நிலவின்,
வெள்ளைப் பொழிவில்,
பால்சோறு உண்ணும் பொழுதெலாம்,
எனக்கும் ஊட்டுகிறாய்!
பொம்மைகளுடன் பொம்மையாய்,
நீ விளையாடும் பொழுதெலாம்,
என்னையும் அழைக்கிறாய்!
தொட்டிலுக்குள் அழகாய்,
நீ உறங்கும் பொழுதெலாம்,
தாலாட்டு கேட்கிறாய்!
இந்த அருமையான,
தருணங்களை எல்லாம்,
எனக்காகவே தருகிறாய்!
இராட்டினக்காரி
என்னைக் கண்டதும்,
தாவி குதித்து,
அனைத்துக் கொண்டு,
கன்னங்களை ஈரமாக்கி...
நீ பார்க்கும் பார்வையால்,
என் மனதிற்குள்,
ஆயிரம் இன்பங்களை,
அழகாய் சுழலடித்தாயடி,
அழகிய இராட்டினக்காரி!
வண்ணங்கள்
கால்களை நெஞ்சில் பதித்து,
புன்னகைகளை காற்றில் வீசி,
எச்சில் குழைத்த கைகளினால்,
என்னை வருடும் பொழுதெலாம்...
என் மனம்,
புன்னகைகளை மறைத்து...
வண்ணங்களை தெரிக்கிறது!
சிறுபிள்ளையாய் செய்வாயா?

இறைவா...
தாயின்...
அன்பான முத்தமும்,
ஆராரிரோ தாலாட்டும்,
அழகிய கொஞ்சலும்,
பாசமிகு அரவணைப்பும்,
அவள் மடி உறக்கமும்,
மீண்டும் பெற...
சிறுபிள்ளையாய் செய்வாயா?
சன்னலோரம் ஒரு பார்வை...

வகுப்பறை வாசலில்,
என்னை பார்த்து,
விடை பெறுவதற்கு,
கை அசைத்துவிட்டு...
பிரிய மனமின்றி,
சன்னலின் ஓரம்,
எட்டிப் பார்த்து,
வருத்தத்துடன் நீ சென்றதும்...
உன்னுடயை பிரிவால்,
பள்ளியின் முதல் நாளில்,
நான் அழுத அழுகையும்...
அழகிய கவிதைகள்!
அழகான பொய்கள்!

பூமி தொட விழையும் மழையின்,
நீர்த் துளிகள் என்னை தொடாமல்,
சேலைக் குடைகுள் என்னை மறைத்தாய்!
வெடிக்கும் இடி முழக்கம்,
என் காதுகளில் எட்டாமல்,
மார்போடு இருக்க அணைத்தாய்!
புன்னகையால் படம் எடுக்கும் மின்னலுக்கு,
முகம் காட்ட வேண்டாம் என்று,
என் கண்களையும் கைகளால் மூடினாய்!
இதனால்...
என்னை தூரலாய் தொட வந்த மழையும்,
எனக்காக இசை மீட்டி தந்த இடியும்,
என்னை படம் பிடிக்க வந்த மின்னலும்,
உன்னை பார்த்து பொறாமை பட்டதாய்...
ஒவ்வொரு முறையும் இவ்வளவு அழகாக,
என்னிடம் எதற்காக பொய் சொல்கிறாய்?
தூரல் மழை...

வீட்டின் முற்றத்தில் நின்று...
பெய்யும் மழையின் சாரலை,
கைகளின் குவியத்தில் ஏந்தி,
குளிர்ச்சியை இரசித்திருந்த பொழுது...
மழையின் தூரல் துளியை,
என் முகத்தில் தெளித்து...
நீயும் என்னை போன்றே,
சின்னக் குழந்தையாய் மாறி,
என்னுடன் விளையாடி தருணத்தை,
இமை அளவும் மறக்கவில்லை!
அழகிய பொழிவுகள்!

எத்தனை எத்தனையோ மலர்கள் பறித்து,
அதில் ஒன்றை தேர்வு செய்து,
அதனை அழகாய் சூட வைத்து,
எனக்காகவே பூத்ததாய் பொய் சொல்வாய்!
தத்தித் தவழ்ந்து திரியும் போது,
என்னை அறியாமல் கதவில் முட்டினால்,
பிழை செய்ததாய் கதவை அடித்துவிட்டு,
எனக்கு சமாதானங்கள் பல சொல்லி,
கண்ணீர் துடைத்து அழுகையை நிறுத்துவாய்!
கைகளின் தொட்டிலில் என்னை ஏந்தி,
நெற்றி மீது நெற்றி வைத்து,
மூக்கின் மீது மூக்கு முட்டி,
கண்களால் முத்தமிட்டு அழகாய் கொஞ்சுவாய்!
இத்தனையையும் செய்துவிட்டு,
ஏதும் செய்யாததாய் சொல்லும்,
உன்னுடைய அன்பிற்கு,
நிகர் ஏதும் உண்டோ?
அழகிய ஓவியங்கள்!

நீரில் நனைந்த,
பழைய சோரும்...
உப்பில் ஊறிய,
எலுமிச்சை ஊறுகாயும்...
பகிர்ந்துண்டு மகிழ்ந்த,
அந்த நாளின்...
அனைத்து நிகழ்வுகளும்,
நினைவினில் வரைந்த,
அழகிய ஓவியங்கள்!
மழை இல்லாமல் நனைகிறேன்!

பேசும் மழலை மொழியையும்,
செய்யும் அழகான குறும்பையும்,
தத்தித் தவழும் நடையையும்,
கை தட்டி சிரிப்பதையும்,
புன்னகையோடு கண் சிமிட்டுவதையும்...
பார்த்து பார்த்து இரசித்து,
நீ பொழியும்,
உன்னுடைய அன்பால்...
மழை வரும் முன்னமே,
ஆனந்தமாய் நனைகிறேனே!
அதிர்வு மொழி...

அன்போடு உதிர்க்கும்,
வார்த்தைகள் மட்டுமே,
காற்றை களைக்கும்,
அதிர்வு மொழியை,
முழுவதுமாய் கற்றிருக்கிறது!
மற்றவர்கள் உதிர்க்கும்,
அன்பில்லா வார்த்தைகள்,
காற்றில் கரைந்து,
ஒலி இழப்பதால்...
நீ இல்லாத,
ஒவ்வொரு நொடியும்,
மெளனம் மட்டுமே,
என்னை சூழ்கிறது!
பாசம் அறியாதவன்...

கோவிலுக்குச் செல்லும்,
ஒவ்வொரு முறையும்,
எனக்காக வேண்டுவதால்...
மூலவருக்கு கோபம்!
"நீ எத்தனை முறைதான்
வேண்டுவாய்?" என்று...
பாவம்...
படைத்தவன்,
ஈன்றவளின் பாசம் அறியவில்லை!
செல்லக் குறும்புகள்!

கன்னத்தை கிள்ளி,
கொட்டு வைத்து,
வசைப் பாடாமல்...
அழகாய் சிந்தும்,
உன்னுடைய சிரிப்புகளுக்காக...
தினமும் தொடர்கிறது,
என்னுடைய,
செல்லக் குறும்புகள்!
உறக்கமும் அழகு... அழகு...

இதமான தென்றலும்,
நறுமண வாடையும்,
கலந்த காற்றால் வரும்,
உறக்கத்தை காட்டிலும்...
தலை வருடி,
தட்டிக் கொடுத்து,
தாலாட்டு கேட்டு வரும்,
உறக்கம்...
எவ்வளவு அழகு!
எனக்கும் ஆனந்தமே!!!

வாங்கி வந்த இனிப்பை,
ஒரு கடி கடித்தவிட்டு,
மீதத்தை தரும் பொழுது...
உந்தன் முகத்தில் பொழியும்,
அமிழ்தை உண்ட ஆனந்தத்தை,
காணும் பொழுது,
எனக்கும் ஆனந்தமே!!!
இன்பத்திலும் பேரின்பம்!

பண்பட்ட நிலத்தை,
பயனுற விதைத்து,
நெடுக வளர்ந்து,
எட்டிப் பார்க்கும்,
நெல்மணிகளைக் காணுதல்,
விதைத்தவனுக்கு இன்பம்!
அதைப் போன்றே...
பண்பட்டு வளர்ந்த,
பிள்ளையை காண்பது,
ஈன்றவளுக்கு...
இன்பத்திலும் பேரின்பம்!
விண்ணப்பங்கள்!

உன்னருகே இல்லாமல்,
பயில்வதில் மூழ்கிய,
கல்லூரி நாட்களையும்...
வேலை தேடியே,
அலைந்த நாட்களையும்...
மீட்டுத்தர வேண்டியே,
ஒவ்வொரு கடவுளுக்கு...
ஆயிரம் விண்ணப்பங்கள்!
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)





