Sorrow லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Sorrow லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வேதனை

வண்ணங்கள் விலகிப்போய்
துளிகள் உன் விழியோடு
உறவாடுவதேனடி
நின் கருமணியில்
கண்ணின் நீர்த்துளிகளுக்கு
இடமில்லையோ பெண்ணே
நான் அங்கு வசிப்பதால்...

எனக்கு
நிந்தன் கருமணியில் நிழலாடும்
உருவம் கூட விழியின்
வேதனை தான்...
ஆகையால்
இக்கணம் முதல்
விழியோடு திரையிட்டு
உறவாடும் இமையாவேன்
நான்!