இனிதான் இனிதாய்...


இனிதான் இனிதாய்...
இரவினில் இதழ்கள் இசைப்பதும் இனிதாய்!
இனிதான் இனிதாய்...
இமையில் இமை இமைப்பதும் இனிதாய்!

இசைந்து இசைந்து இல்லில்,
  இறையென இருந்தோம்...
இடரிலும் இன்னலிலும் இருவரும்,
  இணைந்தே இருப்போம்....

இறவா இரவினில்,
 இச்சையின் இசைவினில்...
இழக்கயேதும்,
 இல்லாது இருப்போம்...

(இனிதான் இனிதாய்)

இறுக்கிய இடையினில்,
இறுகிய இதயமும்,
இறகாய் இடருதே...

இவன் இருப்பது,
 இவள் இடையில்...
இவள் இயங்குவது,
 இவன் இசைவில்...

(இனிதான் இனிதாய்)

இருவரும் இரையாவது,
இச்சையெனும் இறையால்,
இனிதான் இனிதாய்!
இனிதான் இனிதாய்!

2 பின்னூட்டங்கள்:

Hayagreev சொன்னது…

Very good
Do read my blog too for tamizh kavidhaigal

https://kavikkuyil.com

Hayagreev சொன்னது…

https://www.kavikkuyil.com

கருத்துரையிடுக