தலைவன் வருவான்...


கயற் பிம்பங் கண்டு,
சிறகு விரித்ததோ கொக்கு?
கூந்தல் வாடையால் மயங்கி
நர்த்தனம் ஆடியதோ காற்று?
படர்ந்து கிடக்கும் கார் கூந்தலை
மழை மூட்டம் என்றெண்ணி
நாட்டியம் ஆடுதோ மயில்?
இவை யாவும் நிகழ்தள் அறியாது,
பசலை நோய் கொண்டு...
தலைவன் வருகையை எண்ணி,
காத்திருக்கிறாள் தலைவி...

(நன்றி : ப்ரியா இரங்கநாதன்)

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக