பால்வீதியில் ஒரு வீடு...


மின்மினி பூச்சிகளை,
வானில் சிதரடித்து,
நட்சத்திரங்கள் என்கிறாய்...

பிள்ளைகளின் புன்னகைகளை,
ஒவ்வொன்றாய் பரித்து,
வானில் படையலிட்டு,
சந்திரன் என்கிறாய்...

வேங்கை மரச்சாந்தை,
விரல் தூரிகையால்,
வண்ணமாய் பூசி,
மேகங்கள் என்கிறாய்...

இவை அனைத்தையும்,
கூண்டிற்குள் அடைத்துவிட்டு,
நீ வாழும்,
வீடு என்கிறாய்...

உனது வீட்டில்,
என் வரவை,
விடியலாய் காண்பாயோ?

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக