எனக்காக எல்லாம் எனக்காக...


உன் கண்களின் சாரலில்,
நீ நனையும் பொழுதெலாம்,
என்னையும் நனைத்துவிடுகிறாய்!

அழகிய நிலவின்,
வெள்ளைப் பொழிவில்,
பால்சோறு உண்ணும் பொழுதெலாம்,
எனக்கும் ஊட்டுகிறாய்!

பொம்மைகளுடன் பொம்மையாய்,
நீ விளையாடும் பொழுதெலாம்,
என்னையும் அழைக்கிறாய்!

தொட்டிலுக்குள் அழகாய்,
நீ உறங்கும் பொழுதெலாம்,
தாலாட்டு கேட்கிறாய்!

இந்த அருமையான,
தருணங்களை எல்லாம்,
எனக்காகவே தருகிறாய்!

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக