
பெண்ணே! போதும்... போதும்...
இதற்கு மேலும் சிந்தாதே...
வாடையற்ற நின் புன்னகைகளை,
தினம் தினம் சேமித்தே,
எந்தன் ஆயுள் கழிந்துவிடும்...
மிளிர்தலில் கண்களும் மங்கிவிடும்...
வேண்டுமென்றால், இப்படிச் செய்,
உந்தன் மனதிற்குள் மெதுவாக,
வெகு நேரம் சிரித்துக்கொள்,
அங்கு வந்து கேட்டுக்கொள்கிறேன்!