
மேகத்தை கேட்டாய்...
அதனை உறுக்கி,
மழையாய் தந்தேன்!
முத்தம் ஒன்று,
கடனாய் கேட்டாய்...
மொத்தமாய் தந்துவிட்டேன்!
புத்தகம் ஒன்று கேட்டாய்...
பற்பல கவிதைகள் தந்தேன்!
கண்களை இரண்டையும் கேட்டாய்...
கனவுகள் அனைத்தையும் தந்தேன்!
எந்தன் இதயத்தை,
களவாட வேண்டும் என்றாய்...
மலர்ந்த காதலை மலராய் தந்தேன்!
வேறென்ன வேண்டுமென்று,
நானே கேட்டுவிட்டேன்...
என்னையே வேண்டுமென்றாய்,
நீ தான் நான் என்றேன்...