அடையாளங்கள்



ப்ரியமான முத்தமும்,
அழகான வெட்கமும்...
பார்வையின் கூச்சமும்,
உதட்டோர நாணமும்...
கன்னத்தில் குழியும்,
நாவின் மொழியும்...
மேலும் பலவும்...
உன்னிடம் யாசகமாய் பெற்ற,
நமது சந்திப்பின் அடையாளங்கள்
4

தேடும் கண் பார்வை...



அலைகள் அறியா...
வெண் கடலின்,
கருவட்டத் தெப்பம்,
மையிட்டக் கரையோரம்,
சுழன்று கொண்டே இருக்கிறதோ...
எந்தன் வரவை காண?
4

பேருந்தில் நீ எனக்கு...



என்னை பார்த்து,
அன்று ஏனடி,
அழகாய் சிரித்தாய்?

பேருந்து பயணத்தில்...
சன்னல் ஓரத்தில் அமர்ந்து,
காதுகளுக்கு இனிமையாய்,
இசை பகிர்ந்து கொண்டிருந்தேன்...

என்னை பார்த்து,
அன்று ஏனடி,
அழகாய் சிரித்தாய்?

போகும் இடம் அறிந்தும்,
நீ இறங்கிய,
பேருந்து நிறுத்தத்தில்...
என்னையும் இறக்கியது,
உன் சிரிப்பு...

என்னை பார்த்து,
அன்று ஏனடி,
அழகாய் சிரித்தாய்?

இசை மழை இருந்தும்...
நனையாது, இருக்கச் செய்த,
உந்தன் பார்வையும் சிரிப்பும்,
ஈர்த்துக் கொண்டே இருந்ததே...

என்னை பார்த்து,
அன்று ஏனடி,
அழகாய் சிரித்தாய்?

அன்று முதல்
ஒவ்வொரு
பேருந்து பயணத்திலும்
உந்தன் வருகைக்காக
காத்திருந்தேன்

பல நாள் தவத்தின்
பெரும் பயனாக
மீண்டும் வந்தாய்
அருகில் அமர்ந்தாய்

என்னை பார்த்து,
அன்றும் ஏனடி,
அழகாய் சிரித்தாய்?
4

எத்தனை அழகு?



சன்னதியில் பெற்ற,
குங்குமத்தை கையில் ஏந்தி,
நெற்றியில் இட்டு,
கோவிலைச் சுற்றி வந்து,
கடவுளை காணும்...
செய்கை அழகு!

கோவிலைச் சுற்றி,
நடக்கும் போது...
உந்தன் பாதம் சுற்றி,
நடனமாடி சிரிக்கும்,
சரிகை வேய்ந்த,
புடவையும் அழகு!

மெளனத்தாலும்,
கண்களாலும்,
மனதாலும்,
உந்தன் புன்முறுவலாலும்,
கடவுளிடம் பேசும்...
பாவனையும் அழகு!
3

காதல் கடிதம்


உன்னோடு பேசினேன்,
உன்னோடு பழகினேன்,
என்னோடு
உன்னை வைத்து,
ஓயாமல் பார்த்தேன்...
நேற்று வரை,
எந்தன் மனதோடும்,
உந்தன் நிழற்படத்தோடும்...

உன்னோடு பேச வேண்டும்,
உன்னோடு பழக வேண்டும்,
என் அருகில் உனை வைத்து,
பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்...
இன்று முதல்,
என்றென்றும் உன்னோடும்,
உந்தன் மனதோடும்...

இவ்வாறு எண்ணியே
பல இன்று நேற்றாக மாறி
காற்றோடு கவிதையாய்
மறைந்தே போனதே...

ஆனால்...
இந்த இன்று மட்டும்,
இதற்கு விதிவிலக்கு...
ஏனென்றால் இக்கடிதம்,
உன்னிடம் வந்துவிட்டதே...

நான் உன்னை காதலிக்கிறேன்...
4

ஆனந்தம் ஆரம்பம்



குவளை மலரில்,
நீர் வடிவது போல்,
கலங்கம் படராத,
முக வாயில் வழிந்த,
எச்சில் உமிழ் நீரை,
கண்கொள்வதும் ஆனந்தமே...

பேசுதல் அறியாத,
பேசுதலும் தெரியாத,
நான் பெற்ற பேதையை,
யான் காணும்,
சிறு கனமும், ஆனந்தமே...

பிஞ்சு விரலால்,
முகம் வருடி,
எச்சில் வழிய,
நீ எனக்கு, அளித்த
முதல் முத்தமும், ஆனந்தமே...

காய்ந்த வயிற்றில்,
நீர் கரைப்பதற்கு,
என்னவளை அழைக்க,
நீ எழுப்பும்,
அழுகுரலும் ஆனந்தமே...

எந்தன் கை பிடித்து,
தத்தித் தத்தி, அடி வைத்து,
நீ தரும் புன்னைகையும்,
ஆனந்தமே...

இவ்வாறு நீ உதிர்க்கும்...
ஒவ்வொரு செயலும்,
எனக்கு ஆனந்தமே...
4

ஊமை பொம்மைகள்



என்ன அதிசயம் செய்தாயடி?
என்னை சுற்றியிருக்கும்...
உருவங்கள் யாவும்,
பொம்மைகளாய் தெரியுதடி...
என் அருகில்,
நீ இருந்தால்...

என்ன அதிசயம் செய்தாயடி?
என்னை சுற்றியிருக்கும்...
பொம்மைகள் யாவும்,
ஊமையாய் போனதடி...
சிரித்து புன்னகைத்து,
நீ பேசினால்...

என்ன அதிசயம் செய்தாயடி?
என்னை சுற்றியிருக்கும்...
ஊமைகள் யாவும்,
உவமையாய் போனதடி...
கன்னத்தை கிள்ளி,
நீ கொஞ்சினால்...


என்ன அதிசயம் செய்தாயடி?
என்னை சுற்றியிருக்கும்...
உவமைகள் யாவும்,
உருகியே போனதடி...
எனக்காக நீ தந்த,
அழகான முத்தத்தால்...
0

நிழல்



என்னுடன் வரும் நிழலை,
எனதென்று நினைத்திருந்தேன்...
எனக்காக நீ அனுப்பிய,
நினைவுகள் என்று,
இன்று தான் உணர்ந்தேன்...
உந்தன் பிரிவில்
0

எங்கே இருக்கிறாய்?


மொட்டு விரியா,
மல்லிகையை பரித்து,
கருஞ் சாந்திட்டு,
மலர்ந்ததுள்ள,
நின் கண்களும்...

நீர் பகைமை கொண்டாலும்,
நீரோடு உறவாடும்...
அழகிய புன்னகையொடு,
தேன் தமிழ் பயின்ற...
தாமரையாய் தோன்றும்,
நின் இதழ்களும்...

மழை ஓய்ந்த,
வெளிர்ந்த வானில்...
சிவந்த சூரியனாய்,
தழல் தெரிக்கும்...
நீ இட்ட,
நுதற் பொட்டும்...

என்னை ஒவ்வொரு கனமும்,
வா என்றே அழைக்குதடி...
ஆனால் பெண்ணே நீ,
என் அருகில் இல்லையடி...
3

அந்தரத்தில் குதிக்குதடி மனது



என்னை இழுத்துக் கொண்டு
அந்தரத்தில் குதிக்குதடி மனது...
அழகாய் குடை விரிக்கும்
உன் தாமரை இதழ்களால்...
ஈர்ப்பு விசையறியாது உதிர்க்கும்
உன் சின்னஞ்சிறு புன்னகையால்...
வண்ணமறியாது மலரும்
உன் கன்னக் குழியால்...