புல் நுனியில்...

விடியலின் நீர் துளி
பச்சை புல் நுனியில்
முத்தமிட்டு காதோடு
கவி பாடும் காலை...

உன் குழி விழுந்த
கைகளில் முத்தமிட
காற்றோடு உனக்கு
கடிதம் வரைந்தது.

நீயும் குவிந்த கைகளில்
நீர் துளியை தானம்
பெற்றாய்.

நானும் உன்
மனதை வெல்ல
யாரிடம் கவி பாடுவேன்.

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக