உயிர் + உடல் = ?

வாழ்க்கை ஓர்
நீரோடை
இதை உணர்ந்தேன்
நிலவெட்டிப் பார்க்கயிலே.

என் உயிர்
குளிரோடையிலே
மெல்லிய
வாடைக் காற்றிலே
படகேறி
கரையோடு
உறவாடிக் கொண்டிருந்தது...
உடலோடு உயிர்
சேரவே...

உன் மனம்
பச்சிளம் கதிரை
முத்தமிட்டு அலையாடி வரும்
இளங் காற்றோடு
வந்து
உடலோடு உயிர் சேர்வதை
என் மனம் மட்டும்
உயிர் கொண்டு கண்டதடி
மனதோரம் இன்பம்
மொட்டவிழ்ந்து
மலர்ந்ததடி

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக