நீ அரிதாரம் பூசாத கண்ணனோ?


உனக்கென்று எண்ணாமல்
கருவிற்கு ஏற்றதென
சத்துக்களை உண்டு
நின் வயிற்றிலோர்
உருவம் செய்தாய்

காணா உருவை
ஊண் கொண்டு
உயிர் கொண்டு
கரு அறையினுள்
கூடு கட்டி
மிதமான வெப்பத்தில்
மிருதுவாய் வளர்த்தாய்

இரவும் பகலும்
அறியா கருவை
சுமையென கருதாது
இமையென காத்தாய்

கருவை ஓயாது காக்கும்...
நீ என்ன
நீல அரிதாரம் பூசாத
கண்ணனோ?

2 பின்னூட்டங்கள்:

எஸ்.கே சொன்னது…

Nice one!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

அருமை... தொடருங்கள் வாழ்த்துக்கள்

கருத்துரையிடுக