என்ன அதிசயம் செய்தாயடி?
என்னை சுற்றியிருக்கும்...
உருவங்கள் யாவும்,
பொம்மைகளாய் தெரியுதடி...
என் அருகில்,
நீ இருந்தால்...
என்ன அதிசயம் செய்தாயடி?
என்னை சுற்றியிருக்கும்...
பொம்மைகள் யாவும்,
ஊமையாய் போனதடி...
சிரித்து புன்னகைத்து,
நீ பேசினால்...
என்ன அதிசயம் செய்தாயடி?
என்னை சுற்றியிருக்கும்...
ஊமைகள் யாவும்,
உவமையாய் போனதடி...
கன்னத்தை கிள்ளி,
நீ கொஞ்சினால்...
என்ன அதிசயம் செய்தாயடி?
என்னை சுற்றியிருக்கும்...
உவமைகள் யாவும்,
உருகியே போனதடி...
எனக்காக நீ தந்த,
அழகான முத்தத்தால்...
4 பின்னூட்டங்கள்:
அருமையான கவிதை
வாழ்த்துக்கள்
Very nice one...
so nice and cute... :)
Nice Vinoth
கருத்துரையிடுக