5

தோழி

புருவத்தின் கரையோரம்
திரை நீக்கும் நிமடம் முதல்
நான் காணும் கனவு வரை
உன்னிடத்தில் சரணடையும்.

இன்ப துன்ப நிகழ்வுகள் யாவும்
எனது வார்த்தைகளாய்
நின் மனப்பதிவிற்கு
செவியோடு சென்று சேரும்.

தோழியாய் நீ இருக்கையில்
எனது நிகழ்வுகள் யாவும்
உன்னைச் சுற்றி...

இவையனைத்தும்
உன்னிடம் சேராவிட்டால்
பாரங்கள் தாங்குவதில்லை
என் இதயம்.

என்னை விட்டுதூரம் சென்றாலும்
நினைவுத் தோட்டம்
உன்னோடு நான் பகிர
தினம் தினம்
பூ பூக்குமடி,
எந்தன் உயிர் தோழி...
2

அப்பா

நின் வரவைக் காணத்தான்
பிஞ்சு மனம் காத்திருக்கும்
அரைக் குமிழி உறக்கத்தில்
திரையசைத்துக் பார்த்திருக்கும்
அன்பெனும் பொழிவிற்கு ஏங்கித்தான்
தூக்கம் கலைய
நிலா முகம் இரசிக்கும்
அப்பா...
நின் வரவைக் காணத்தான்
இந்த
பிஞ்சு மனம் காத்திருக்கும்
3

சொர்கத்திலிருந்து பேசுகிறேன்

நிலாச் சோறு சாப்பிட
ஆசை கொண்டு
நின் வயிற்றில்
விதையானேன்...

நீ செய்த தவறெல்லாம்
பாவங்கள் என்றாகி
விதைக்குள் புழுவாய்
உயிர் குடைந்து
போனதடி...

என் நிலையறிந்து
தன் மனமுருகி
நிலவும் இன்று
கண் கசிந்து
கருத்துப் போனதடி...

உலகத்தை எட்டிப்
பார்க்கும் முன்னே
வேற்றுலகம் கடத்திவிட்டாய்.

உனை பிரம்மன் என்று
நான் நினைத்தேன்
எமனாய் நின்று
கருகளைத்த காரணம் என்ன?
0

புதைகுழி

பணமெனும் புதைகுழியில்
மனித உயிர் சுகம் காணுமோ?

அன்பும் அரவணைப்பும்
மனிதா நின் நிலைக் கண்டு
எட்டிப் பார்த்து
உனையெழுப்பி கொணர்ந்து
புதுவுலகம் காட்டுதடா!

நீ அதனையும்
உள்ளிழுத்ததனால்
மல்லிகை வாடை
துர்நாற்றத்தில்
வலுவிழந்து போனதடா!

நீ வெளியே வந்தாலும்
எந்தன் சிறு கண்ணீர் துளிகள்
நின் அழுக்கை களையாது
மனித மனங்களின்
மழை அன்று வேண்டுமடா
அன்பால் நீ நனைய

திருமணம்

தட்சனை வேண்டுமாம்
பெண்ணவள் வேங்கையின்
கை கோர்க்க

பூமகள் கோளத்தை
தவமிருந்து வளர்த்தவன்
பண இச்சை பரிமாற்றம் கேட்கும்
தரங்கெட்ட கூட்டத்திற்கு
உறவு சேர்த்து வைப்பதுவோ
திருமணம்

பெண் சிசுக் கொலை

ஐயிரண்டுத் திங்கள்
கருவறைத் தாங்கிய
வலியொன்றும் பெரிதில்லைத்
தாயே...

கள்ளியரைத்து நீ தரும்
உயிருருஞ்சும் பாலை
நின் மனதோடு
கருங்கல் நட்டு
உரைந்த உயிர் வலியை
காட்டில்
0

மூக்குத்தி

மொட்டுத் தண்டு மலரின் மேலே
தேன் தேடும் மூக்குத்தி
3

உயிரற்ற பூக்கள்

செடியில் உள்ள பூக்கள் யாவும்
உயிரற்று பிறக்கிறது
உன் கூந்தல் ஏறி நின்றி
உயிர் பெற்றுச் சிரிக்கிறது
நின் கூந்தல் வாடைக் கண்டு
பூக்கள் நாணி மடிகிறது
0

சூரியப் பெண்ணே

இலைத் தட்டு மனதின் மேலே
பனிக் கூட்டம் கூடு கட்டி
சூரிய வரவைப் பார்த்திருக்கும்
நினைவுகளே...

அவள் வரவைக் கண்டவுடனே
வண்ணத்துப் பூச்சிகளாய்
சிறகடித்துப் பறப்பதேனோ?

பனிக் கூட்ட குளிர்ச்சி விரட்டி
சூரியப் பெண் கதிர்கள் யாவும்
மழைச் சாரல் தெரித்தது போதும்!

என் மனமுரைந்து என்னவளே...
சூரியப் பெண்ணே நீ
நடுங்க வேண்டாம்!

என் இரத்த மொட்டுக்கள் வந்து
மனக் கூரைக்குள் வாழும் உன்னை
குளிர் துரத்தி வெப்பம் தரிக்கும்.
2

இனிமை

நிறமற்ற நீரும் உருமாறி
கருநிறம் கொண்டது

நிலாப் பெண் சிரிப்பினிலே
மேகங்கள் நாணமுற்று
கருத்துப் போனது

நிலவழகால் ஈர்க்கக் கண்டு
நிழலாடச் செய்து
நீரும் சலனப்பட்டது

மேகக் கருஞ் சாந்தை
மரமேனோ கடன் வாங்கி
மேனி கருத்து
உயிரற்று நிற்கிறது

தலையை இடைச் செருகிய
கால்களை அணைத்தபடி
கைகள் கோர்த்தமர்ந்தவாறு
நின் நினைவுகளோடு
நீரின் சலனத்தை கலைத்தபடி
மெளனமாய் நானிருந்து
நல்லிரவைக் கழிக்க வேண்டும்

என் துணையென
நீயில்லா இரவினிலே...

சில நேரம் பிரிவும்
இனிமை தான் பெண்ணே...