இரவு உறக்கம் இமையை நெருங்கும்
உன் நினைவுகள் யாவும்
அதனை எதிர்த்து நிற்கும்
பனித் துளிகள் சேர்த்து வைத்த
குளிர் கூட்டு வெண்ணிலவு
மனது மட்டும் உறக்கங் கேட்கும்
நினைவுச் சண்டையில்
உறக்கமெனும் சடலம்
தனக்குத் தானே தீ வைக்கும்
இவ்வுணர்வை என்னவென்று சொல்வேன்
காதலா இல்லை உறக்கம் சாதலா?
என் மேகத் தோழி
ஒற்றைக் கண் பெண்ணவள்
திங்களுக்கிரு முறை அயற்வாள்...
அவளுறக்கம் கண்ட ஊறார்
அமாவாசை என்பர்!
உடல் நலின மேனிக்கு
வெண்ணிற புகையுடுத்தி
வலம் வருவாள்...
மண் வாடை மலர
நீர்த் தெளிப்பாள்
எந்தன் இரவுத் தோழி
கரு விண் மேகமே...
திங்களுக்கிரு முறை அயற்வாள்...
அவளுறக்கம் கண்ட ஊறார்
அமாவாசை என்பர்!
உடல் நலின மேனிக்கு
வெண்ணிற புகையுடுத்தி
வலம் வருவாள்...
மண் வாடை மலர
நீர்த் தெளிப்பாள்
எந்தன் இரவுத் தோழி
கரு விண் மேகமே...
மனிதப் பிரிவு
பழகியது சில நாட்கள்
பிரிந்திருக்கிறோம் வெகு நாட்கள்
திசைகளறியா பிரிவினிலும்
நினைவுகள் யாவும்
பொம்மைகளாகும்
பழகிய உருவம்
அருகிலில்லா தருணம்
பிரிந்திருக்கிறோம் வெகு நாட்கள்
திசைகளறியா பிரிவினிலும்
நினைவுகள் யாவும்
பொம்மைகளாகும்
பழகிய உருவம்
அருகிலில்லா தருணம்
ஊமை
விழியோடு நீர் கண்டேன் - அவள்
கண்கள் துடிக்கக் கண்டேன்!
மெளனத்தின் மொழியறிந்தவள்
என்பதையும் கண்டேன்!
பேதையவள் வாய் மூடி
கை பேசும் வித்தைக் கண்டேன்!
அக்கனம் விழியிரண்டும்
இமைத் தோகை விரிக்கக் கண்டேன்!
பாவம் என்னச் செய்தனளோ?
செவ்விதழ் விரித்து சொல்லொன்று
மொட்டுவிட வழியில்லை...
நின் நீர் தாங்க என் கைகள்
மறுக்கவில்லை...
எந்தன் அன்புத் தோழி
நீ ஊமையென்று ஊர் ஏசும்
ஆனால் அவர்களுக்குத் தெரியாது
இரு விழியும் ஈரைந்து விரலும்
பிறரறியா மெளனம் பேசுமென்று
பெண்ணே ஊனம் உன்னிடமில்லை
உனையேசும் ஊரிடமே
கண்கள் துடிக்கக் கண்டேன்!
மெளனத்தின் மொழியறிந்தவள்
என்பதையும் கண்டேன்!
பேதையவள் வாய் மூடி
கை பேசும் வித்தைக் கண்டேன்!
அக்கனம் விழியிரண்டும்
இமைத் தோகை விரிக்கக் கண்டேன்!
பாவம் என்னச் செய்தனளோ?
செவ்விதழ் விரித்து சொல்லொன்று
மொட்டுவிட வழியில்லை...
நின் நீர் தாங்க என் கைகள்
மறுக்கவில்லை...
எந்தன் அன்புத் தோழி
நீ ஊமையென்று ஊர் ஏசும்
ஆனால் அவர்களுக்குத் தெரியாது
இரு விழியும் ஈரைந்து விரலும்
பிறரறியா மெளனம் பேசுமென்று
பெண்ணே ஊனம் உன்னிடமில்லை
உனையேசும் ஊரிடமே
முதல் கவிதை
கவிதைகள் பல
கேட்டினும் அறிந்திலேன்
இத்தகு இனிமை
மழலையின்
புதுக்கவிதை...
நான் இரசித்த
முதல் கவிதை...
கேட்டினும் அறிந்திலேன்
இத்தகு இனிமை
மழலையின்
புதுக்கவிதை...
நான் இரசித்த
முதல் கவிதை...
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)