தொடு மலர்ச் செய்கையில்
தலைத் தொங்கும் அனிச்சத்தை
பசுமைப் படர்ந்த காட்டிற்குள்
இடர் படும் செடிதனை
பரைத்துத் தேடினள் கண்டதும்
ஐந்தண்டு கை யதனில்
பிடுங்கி நட்டாள் கூந்தலில்
வாடியது அனிச்ச மல்ல
பெருகிய தவள் நாணம்
தொடுஞ் செயலி லுருகும்
அனிச்ச மலர் போல
நாயகன் மூச்சுக் காற்றிலும்
உருகி வழியும் பெண்மை
உயிர்ச் சிற்பங்கள்
பதிக்கும் பாதத்தை
உள்ளிழுத்து உறவாடும்
சீர்மிகு மணலொடு
ஆர்பரிக்கும் கரையோரம்
தென்னந் தோலை
போர்த்தி யுடுத்தி
மூங்கில் கால்களை
துணையெனக் கொண்டு
அமர்ந்து நிற்கும்
குடில் கோபுர
சிறு கோவிலின்
உயிர்ச் சிற்பங்கள்
வெளி நின்று
நகைப்பது காண்
உள்ளிழுத்து உறவாடும்
சீர்மிகு மணலொடு
ஆர்பரிக்கும் கரையோரம்
தென்னந் தோலை
போர்த்தி யுடுத்தி
மூங்கில் கால்களை
துணையெனக் கொண்டு
அமர்ந்து நிற்கும்
குடில் கோபுர
சிறு கோவிலின்
உயிர்ச் சிற்பங்கள்
வெளி நின்று
நகைப்பது காண்
இமைச் சிறகு
சிறகுகள் புதிதாய்
என்னுள் முளைத்து
காற்றை துளைத்து
தூறப் பறந்தாலும்
ஒன்றை மட்டும்
மறவாதென் மனது
கரு நிலவை
தாழிட்டு அடைகாக்கும்
இமைச் சிறகுகளின்
நீட்டல் முடிகளை
என் விரல்கள்
வருடுவதை மறப்பதில்லை
என்னுள் முளைத்து
காற்றை துளைத்து
தூறப் பறந்தாலும்
ஒன்றை மட்டும்
மறவாதென் மனது
கரு நிலவை
தாழிட்டு அடைகாக்கும்
இமைச் சிறகுகளின்
நீட்டல் முடிகளை
என் விரல்கள்
வருடுவதை மறப்பதில்லை
என் நிழலில் நான்
நரைத்த நாட்களின்
இளமைக் காலம்
தேடிப் பார்த்தேன்
கிடைக்கவில்லை
நரைக்கும் முன்
என் நிழலாய்
மாறிப் போனவனை
கனம் ஒன்றிலும்
நினைத்ததில்லை
மூன்று கால்
நாயகன் ஆகிவிட்டேன்
எந்தன் நிழலின்
துணைவனாகிவிட்டேன்
இளமைக் காலம்
தேடிப் பார்த்தேன்
கிடைக்கவில்லை
நரைக்கும் முன்
என் நிழலாய்
மாறிப் போனவனை
கனம் ஒன்றிலும்
நினைத்ததில்லை
மூன்று கால்
நாயகன் ஆகிவிட்டேன்
எந்தன் நிழலின்
துணைவனாகிவிட்டேன்
நட்பிலக்கணம்
வெண் சுவரின்றி
வாய் பிளக்கும்
சிறு நகையும்
மொழி அறியாது
நா தெரிக்கும்
குறை வரியும்
குழந்தையிடம்
அழகு தான்
துன்பம் துயரம்
இன்பம் இடுக்கண்
இவையாவும்
அர்த்தநாரிப் பெண்
உன்னுடன் பகிர்வதும்
அழகு தான்
பிறப்பால் மலரும்
உறவுகள் இடையில்
மறைந்து மிளிரும்
அன்பு உருமாறி
மருவிய நட்பும்
அழகு தான்
உணர்வால் பிறக்கும்
தோழமைத் தேடி
திகைக்கக் கிடைக்கும்
நட்பே உருகி
மருவிய நட்பும்
அழகு தான்
வாய் பிளக்கும்
சிறு நகையும்
மொழி அறியாது
நா தெரிக்கும்
குறை வரியும்
குழந்தையிடம்
அழகு தான்
துன்பம் துயரம்
இன்பம் இடுக்கண்
இவையாவும்
அர்த்தநாரிப் பெண்
உன்னுடன் பகிர்வதும்
அழகு தான்
பிறப்பால் மலரும்
உறவுகள் இடையில்
மறைந்து மிளிரும்
அன்பு உருமாறி
மருவிய நட்பும்
அழகு தான்
உணர்வால் பிறக்கும்
தோழமைத் தேடி
திகைக்கக் கிடைக்கும்
நட்பே உருகி
மருவிய நட்பும்
அழகு தான்
என் மேகத் தோழி
ஒற்றைக் கண் பெண்ணவள்
திங்களுக்கிரு முறை அயற்வாள்...
அவளுறக்கம் கண்ட ஊறார்
அமாவாசை என்பர்!
உடல் நலின மேனிக்கு
வெண்ணிற புகையுடுத்தி
வலம் வருவாள்...
மண் வாடை மலர
நீர்த் தெளிப்பாள்
எந்தன் இரவுத் தோழி
கரு விண் மேகமே...
திங்களுக்கிரு முறை அயற்வாள்...
அவளுறக்கம் கண்ட ஊறார்
அமாவாசை என்பர்!
உடல் நலின மேனிக்கு
வெண்ணிற புகையுடுத்தி
வலம் வருவாள்...
மண் வாடை மலர
நீர்த் தெளிப்பாள்
எந்தன் இரவுத் தோழி
கரு விண் மேகமே...
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)