22

உயிரிசை

ஒரு வாய் கொண்டு
ஈருயிர் பகிர்ந்து உண்ணும்
ஈரைந்து மாத உறவுக்கு
ஈடு இணை இவ்வுலகில்
எவறேனும் கண்ட துண்டோ

கருத்த அறை அதனில்
தாயவள் உடல் உரிஞ்சி
செங்காந்தற் மலர் மேலே
செந்தேன் தடவியது போல்
தன் உடல் தரித்து
தானறிந்த அழுகை யெனும்
நாதம் முழுங்கி உலகிற்கு
தன் வருகையை யறிவிக்கும்
இசை நிகழ்வை யுணர்ந்து
மனமகிழும் தாய் அவளின்
உணர்வுகளை உணர்ந்த துண்டோ
2

அனாதை

இருவகை குழந்தையாம்
மலர்ந்த வாடை
சிறிதும் இழக்காது
பிறவி கண்டிருக்கும்
சிறு துளிரையும்
உயிர் துறக்கக்
காத்து கிடக்கும்
உடலுருகிய தொன்றையும்
வீதியோடு வாழவிட்ட
விழியழிந்த மூடர்கள்
இங்கே வேண்டாமே
நரகுல நாயகர்கள்
செழித்து வாழும்
வேற்றுலகம் கண்டெடுத்து
குழந்தை செல்வத்தை
துறந்து வாழும்
ஐயறிவு கொண்டு
அனாதை நாய்களாய்த்
திரியும் பேய்களைத்
துரத்துவோம் வருங்களேன்
4

தாய்

விதையாய் விழுந்த எனை
உன்னில் புதையலாய் இட்டாய்

விதையதனில் துளிர் தெரிக்க
உதிரம் உருக்கி உரமாய்
எந்தனில் உயிர் ஊற்றினாய்

திங்கள் பத்து களைய
நின் வயிற்றுத் தொட்டிலெனும்
ஊஞ்சலில் எனை இட்டாய்

பெண் எனும் போர்வைக்குள்
சேய் பின்பு தாரமாகி
என்னுடையத் தாய் ஆனாய்

உன்னை பற்றி எண்ணியே
வியப்புற்றேன் என் தாயே
2

வைரம்

மலையிரண்டில் மையத்தில்
தலையெட்டிப் பார்த்திருக்கும்
விடியற்பொழுது நாயகனின்
சிரிப்பிற்கு ஒப்புமையோ
விரலெட்டிப் பார்க்கும்
மோதிரம் அமர்ந்த
விரல் கிளையின்
மேல் மலர்ந்த
வெண்குடை விரித்து
நின் விழி நோக்கும்
வைரக் கல்
4

நாட்டியம்

சிவந்த பாதங்களின் சுவறேறி
படர்ந்து சுற்றிய சலங்கையின்
ஒலி யுதிர்க்கும் முத்துக்கள்
ஒவ்வொன்றாய் கவி பாடும்
நின் நாட்டியப் பாதங்கள்
பூமி யெனும் வீணையை
சிவந்துச் சிவந்து மீட்டுவதால்
4

வாழ்த்துக்கள்

பூ வொன்று பூத்து
பிறந்த நாள் எனும்
புது வருடம் காணுதாம்
மற்ற மொட்டுக்கள் யாவும்
இதழ் விரித்துச் சிரித்து
வாடைக் காற்றில் வீசுகையில்
மணம் இடைச் செருகி
வாழ்த் தொலிகள் கூறுதாம்

6

கவிப் பூக்கள்

எந்தன் எண்ணத்தில் பிறக்கும்
கவிப் பூக்கள் ஒவ்வொன்றும்
பொய்மையை யுறிஞ்சி புன்னகைக்கும்
என்னவளைப் புதுமையாய் போற்றும்
அழகியதாய் தன்னை மிளிர்க்கும்
நீர்த்தேக்க கார்முகில் குளிக்கையில்
வெள்ளி வட்டமாய் தோன்றிய
நிலா குமிழின் தோரணையையும்
மிஞ்சும் அதனழகையும் மிஞ்சும்
5

கனவுகள் கனவு காணும்

உன்னை நினைக்கும்
நொடியில் எல்லாம்
விழியும் மனதும்
விழித்தே இருக்கும்

நெஞ்சத்தின் ஓரம்
கனவுகள் மலரும்

உன்னை எண்ணிய
ஒவ்வொரு கனவும்
சின்னச் சின்ன
கனவுகள் காணும்
2

முகம் மலரும்

உன்னைப் பார்த்த
நாளி லெல்லாம்
சுகமான உறக்கம்
விழியோடு உருகும்

நினைவுகள் ஆசைகள்
இவை யாவும்
ஒன்றாய் சேரும்

இனிமையின் அமுதாய்
கனவுகள் மலரும்

கனவின் திரையில்
என்னவளே நிந்தன்
முகம் மலரும்
2

தவிக்க வைத்த தனிமை

விண் திரையில்
வெண்மை படர்ந்திருக்க
மூட்டங்கள் மறைத்தாலும்
எட்டிப் பார்க்கும்
நிலவிற்குத் தெரியும்
என் சோகம்

பூட்டி வைத்த
இருள் கொட்டகையில்
என்னைச் சுற்றி
பல நட்சத்திர
உறவுகள் இருந்தும்
நீயில்லா இரவு
வீணாகிப் போனதடி

நிலவைப் பார்க்கும்
ஒவ்வொரு கனமும்
நினைவுகள் யாவும்
ஒன்றாய் சேரும்
வெள்ளி நிலவிற்கு
கரு வண்ணம்
அள்ளிப் பூசும்