10

நீ தான் நான் என்றேன்...



மேகத்தை கேட்டாய்...
அதனை உறுக்கி,
மழையாய் தந்தேன்!

முத்தம் ஒன்று,
கடனாய் கேட்டாய்...
மொத்தமாய் தந்துவிட்டேன்!

புத்தகம் ஒன்று கேட்டாய்...
பற்பல கவிதைகள் தந்தேன்!

கண்களை இரண்டையும் கேட்டாய்...
கனவுகள் அனைத்தையும் தந்தேன்!

எந்தன் இதயத்தை,
களவாட வேண்டும் என்றாய்...
மலர்ந்த காதலை மலராய் தந்தேன்!

வேறென்ன வேண்டுமென்று,
நானே கேட்டுவிட்டேன்...
என்னையே வேண்டுமென்றாய்,
நீ தான் நான் என்றேன்...
6

நானும் கவிஞன்...



பூக்களும் சிரிக்கும் என்று
அறியாது இருந்து விட்டேன்...
நின் புன்னகை மலர்ந்ததில்
அதனை உணர்ந்து கொண்டேன்!

கருஞ்சாந்தாய் நீர்வீழ்ச்சி
இருந்ததும் அறியவில்லை...
நின் கார்குழலை
வருடும் வரை!

கால்களுக்கும் ஈர்ப்பு விசை
இருக்கும் என்று தெரியவில்லை...
நான் உன்னை நோக்கி
விரைவாக நடக்கும் வரை!

உறக்கத்தையும் சிறை பிடிப்பாய்
என்று ஒருபோதும் அறியவில்லை...
எந்தன் கனவுகளில்
நீ நிறையும் வரை!

நானும் கவிஞன் என்று
நானே நம்பவில்லை...
இந்த கவிதையை
எழுதும் வரை!!!
7

விழியீர்ப்பு விசை



உன்னை கடந்து,
போகும் போது...
நின் விழிகளை,
இமை இரண்டினுள்,
சிறிது நேரம்,
சிறையிடு பெண்ணே!

இத்தனை நாட்கள்,
நாம் நடத்தும்,
விழியீர்ப்பு போராட்டம்,
முடிவுக்கு வரட்டும்!
14

உன்னை பார்த்து இரசித்தேன்



எப்படி தான் வரவழைத்தாய்?
என்னை,
நீ செல்லும் பாதையெல்லாம்...

தோழிகளிடம் பேசும் போதும்,
தங்கையோடு விளையாடும் போதும்,
தாய்மடி சாயும் போதும்,
குறுநகை உதிர்க்கும் போதும்,
குறும்புகள் செய்யும் போதும்,
கோவில் கருவறை பின் சுவற்றில்
தலைமுட்டி கும்பிடும் போதும்,
நந்தியோடு பேசும் போதும்,
உன்னை பார்த்து இரசித்தேன்.

ஒவ்வொரு நொடியும்
நிந்தன்
ஒவ்வொரு செயலையும்
இடையூறுகள் ஏதுமின்றி
எப்போதும் நான் இரசிக்க
நீ செல்லும் பாதையெல்லாம்
இப்படித் தான் வரவழைத்தாய்...

குரல்



எங்கோ ஓர் இடத்தில்
நீ இன்றி தனியனாய்,
உந்தன் நினைவுகளோடு
உறவாடி நான் இருக்க...
அழகாய் நீ அனுப்பும்
குரல் மட்டும் கேட்கிறதே...

தாயே உன்னை நான்
பிரிந்து வாழும் காலம்
சிறிது தான் என்றாலும்...

பிரிவு கொடியதாய்
தோன்றுவதன் காரணம்
நின் அன்பு
என்பதை மட்டும்
நான் அறிவேன் தாயே...
9

ஏனடி மலர்ந்தாய்?



மனத்திலும் குணத்திலும்
மென்மை கொண்ட
மேன்மையான மல்லிகையே
ஏனடி மலர்ந்தாய்?

என்னவள் விழிக்கும் காலம்
இன்னும் வரவில்லையே,
ஏனடி மலர்ந்தாய்?

அவள் பார்வை
உன்னை வருடி
மலர வேண்டிய மல்லிகையே
ஏனடி மலர்ந்தாய்?

தன் விரல் மொட்டுக்களால்
உன்னை வருட காத்திருக்கிறாள்
ஏனடி மலர்ந்தாய்?

வெண்மையை இரசித்து
அவள் நின்னை
இன்னும் முத்தமிடவில்லை
அதற்குள்ளாக
ஏனடி மலர்ந்தாய்?

என்னவள் கூந்தலுக்கு
வாடை வழங்கும் முன்னமே
ஏனடி மலர்ந்தாய்?

நீ
சுயநலம் கொண்டு
மலர்ந்தமையால்
நான் படும் பாடு
அறியமாட்டாய்...

மலர்ந்த மல்லிகையே
நீயுதிர்த்த வாடை
எந்தன் மனதை
இதமாய் வருடாமல்
சற்றே வருத்தியது...
12

தண்டனை...



முத்தத்தின் சத்தம்
உலகில் ஓய்திடினும்
எந்தன் மனதோடு
ஓயவில்லை...

அதன் ஈரம்
உதட்டோடு காய்ந்திடினும்
எந்தன் மனதோடு
காயவில்லை...

உணர்வுகளால் ஈர்த்து
உரைந்த இரத்தமும்
இதுவரை
தழலுற்று மீளவில்லை...

அந்த மெளனத்தில்
பார்வைக் கீற்றுகளாய்
ஒலித்த வார்த்தைகளும்
மறையவில்லை...

ஒற்றை முத்தத்தில்
அளித்த தண்டனையே
போதுமடி பெண்ணே
நாம் இருவரும்
சேரும் வரை...
6

அமிழ்து!



பல நாட்கள்
வற்றிய சோற்றை
உண்டே களைத்துவிட்டேன்...

வெண் தயிர் கொண்டு,
பழைய சோறு குழைத்து,
ஊறுகாய் தொட்டு தரும்,
பிடி சோறு போதுமே....
அமிழ்து உண்டு களித்ததாய்
எந்தன் நினைவினில் தோன்றுமே...

தாயே!
நான் அமிழ்துண்ண வருகிறேன்...
4

அன்பை என்வென்று சொல்ல?



மலர்ந்த முல்லை,
புற்களின் பனித்துளி,
தெரிக்கும் மழைத்துளி,
யாழின் இசை,
பைந்தளிர் கொடி,
காற்றின் கீதம்,
சங்கின் நாதம்,
நிலவின் ஒலி,
தெளிந்த நீர்,
அரிய அமுதம்,
பிள்ளையின் பார்வை,
மழலைச் சிரிப்பு
இவை யாவையும்
தூயதாய் கண்டால்
எந்தன் தாயே
நின் அன்பை
என்வென்று சொல்ல?
6

பதிவுகள்



கடற்கரை மணலிலும்,
காய்ந்த மரத்திலும்,
தேர்வு காகிதத்திலும்,
பச்சை இலைகளிலும்,
ஓடும் நீரிலும்,
வெந்நிற சுவற்றிலும்,
உலவும் காற்றிலும்,
உந்தன் மனதிலும்,
சின்னஞ்சிறு ஓவியங்களாய்...
நீ பதித்த
எனது பெயர்கள்...