0

அந்நியன்


அலை என்னும் காதலி,
ஒவ்வொரு முறையும்,
கடற்கரைக் காதலனை...
முத்தமிட்டு தான் பிரிகிறது

நீ மட்டும் ஏனடி...
என்னை தொடாமலேயே,
அழகிய கண் சிமிட்டலுடன்,
என்னை...
அந்நியனாக்கிப் பிரிகிறாய்?
0

இன்னும் கொஞ்சம் நேரம்...


Innum Konja Neram
பேச எண்ணிய,
வார்த்தைகள் எல்லாம்...
கவிதைகளாய் குவிந்து,
கண்களில் ஒளிர்ந்த,
அந்த அழகிய நிமிடங்கள்...
இன்னும் கொஞ்ச நேரம்,
நான் இரசிக்க வேண்டும்!
0

பேய் வீடு



பணமெனும், பேயின் வீட்டில்...
அகப்பட்டு உழன்றுக் கொண்டிருக்கும்,
ஒவ்வொரு மனிதனின் மனதில்...
ஆழமாய் புதைந்து கிடக்கும்,
அழகான இன்பப் புன்னகைகளை...
நன்றாய் துளையிட்டு எடுப்பது,
உன்னுடன் நான் இருந்து,
மனம் பகிரும் தருணங்களே!
0

ஆதவன்

ஒவ்வொரு நிமிடமும்,
உன் கீற்றுத் தூரிகையால்...
வானம் எங்கும்,
வண்ணம் வீசுகிறாய்!

ஆகையால்...
உன்னில் கொட்டிக் கிடக்கும்,
ஆயிரம் ஆயிரம் வண்ணங்களில்,
சிலவற்றை மட்டும் பரிக்கவே...
எட்டி எட்டி குதித்து,
உன்னை பிடிக்கப் பார்க்கிறேன்.

ஆனால் என் முகத்திலும்,
வெளிர் வண்ணத்தை வீசிவிட்டு...
அழகாய் மறைந்து போகிறாய்!
0

பம்பரம்/Top


கயிற்றைக் கொண்டு,
சுழற்றி விடப்பட்ட,
ஒற்றை கால்,
பம்பரத்தை போன்றே...
என் மனதும்,
உன் நினைவுகளால்,
சுழற்றி விடப்பட்டு,
நொடி பொழுதும் நிற்காமல்,
உழன்று கொண்டே இருக்கிறது!

Like a whip,
that makes a top,
to swirl...

The thoughts about you,
makes my heart,
to swirl,
without any pause.
0

நண்பன்


வைகறையில்...
இளங்காந்தற் கதிரவனைக் கண்டு,
நீராய் உருகும் பனித்துளியே...
உன்னைப் போன்றே,
உருகி வழிய,
ஒவ்வொரு உயிருக்கும்...
புன்னகை பூவோடு,
நட்பை பகிரும்,
தோழமை வேண்டும்!
0

நிலவே முகம் காட்டு


அழகிய வெள்ளி நிலவை,
இதுவரை பார்த்ததே இல்லையாம்...
எனவே உன் முகத்தை,
எட்டி எட்டிப் பார்க்கிறது...
உன் கூந்தலில்,
ஒட்டிக் கொண்டிருக்கும்,
வெண்ணிற மல்லிகைகள்.
4

வார்த்தைகள் இல்லா கவிதை...


இரு வரிகள்...
அதில் வார்த்தைகள்,
எதுவும் இல்லை...
ஆனாலும் கவிதை!

உன் விழியில் வரைந்த,
கண்மை வரிகள்...

சிறுபிள்ளையாய் செய்வாயா?


இறைவா...
தாயின்...
அன்பான முத்தமும்,
ஆராரிரோ தாலாட்டும்,
அழகிய கொஞ்சலும்,
பாசமிகு அரவணைப்பும்,
அவள் மடி உறக்கமும்,
மீண்டும் பெற...
சிறுபிள்ளையாய் செய்வாயா?
0

இறைவா...


அன்பாலே உலகம் செய்து,
அழகான உறவுகளும் செய்தாய்!
உயிர்களை பிறக்கச் செய்து,
அதனை உடலுக்குள் புகவும் செய்து,
இறப்பையும் அறிய செய்தாய்!

மலருக்கு வாடை தந்து,
மலரும் வினை செய்தாய்!
சரிகம இசை தந்து,
அதனை காற்றினில் ஒலியாகச் செய்தாய்!
ஒலியை உணரச் செய்து,
மொழியை பிறக்கவும் செய்தாய்!

சூரிய குடும்பம் படைத்து,
அதனுடன் நிலவும் படைத்து,
ஒளியை எங்கும் படரச் செய்தாய்!
இரவு பகல் மாறுதலின்...
பாகுபாட்டையும் உணரச் செய்தாய்!

இறைவா...
இவை அனைத்தையும் செய்யச் சொல்லி,
உன்னை செய்து அனுப்பியவன் யாரைய்யா?