இராட்டினக்காரி
என்னைக் கண்டதும்,
தாவி குதித்து,
அனைத்துக் கொண்டு,
கன்னங்களை ஈரமாக்கி...
நீ பார்க்கும் பார்வையால்,
என் மனதிற்குள்,
ஆயிரம் இன்பங்களை,
அழகாய் சுழலடித்தாயடி,
அழகிய இராட்டினக்காரி!
வண்ணங்கள்
கால்களை நெஞ்சில் பதித்து,
புன்னகைகளை காற்றில் வீசி,
எச்சில் குழைத்த கைகளினால்,
என்னை வருடும் பொழுதெலாம்...
என் மனம்,
புன்னகைகளை மறைத்து...
வண்ணங்களை தெரிக்கிறது!
இன்னும் கொஞ்சம் நேரம்...
பேச எண்ணிய,
வார்த்தைகள் எல்லாம்...
கவிதைகளாய் குவிந்து,
கண்களில் ஒளிர்ந்த,
அந்த அழகிய நிமிடங்கள்...
இன்னும் கொஞ்ச நேரம்,
நான் இரசிக்க வேண்டும்!
ஆதவன்
ஒவ்வொரு நிமிடமும்,
உன் கீற்றுத் தூரிகையால்...
வானம் எங்கும்,
வண்ணம் வீசுகிறாய்!
ஆகையால்...
உன்னில் கொட்டிக் கிடக்கும்,
ஆயிரம் ஆயிரம் வண்ணங்களில்,
சிலவற்றை மட்டும் பரிக்கவே...
எட்டி எட்டி குதித்து,
உன்னை பிடிக்கப் பார்க்கிறேன்.
ஆனால் என் முகத்திலும்,
வெளிர் வண்ணத்தை வீசிவிட்டு...
அழகாய் மறைந்து போகிறாய்!
உன் கீற்றுத் தூரிகையால்...
வானம் எங்கும்,
வண்ணம் வீசுகிறாய்!
ஆகையால்...
உன்னில் கொட்டிக் கிடக்கும்,
ஆயிரம் ஆயிரம் வண்ணங்களில்,
சிலவற்றை மட்டும் பரிக்கவே...
எட்டி எட்டி குதித்து,
உன்னை பிடிக்கப் பார்க்கிறேன்.
ஆனால் என் முகத்திலும்,
வெளிர் வண்ணத்தை வீசிவிட்டு...
அழகாய் மறைந்து போகிறாய்!
பம்பரம்/Top

கயிற்றைக் கொண்டு,
சுழற்றி விடப்பட்ட,
ஒற்றை கால்,
பம்பரத்தை போன்றே...
என் மனதும்,
உன் நினைவுகளால்,
சுழற்றி விடப்பட்டு,
நொடி பொழுதும் நிற்காமல்,
உழன்று கொண்டே இருக்கிறது!
Like a whip,
that makes a top,
to swirl...
The thoughts about you,
makes my heart,
to swirl,
without any pause.
நிலவே முகம் காட்டு

அழகிய வெள்ளி நிலவை,
இதுவரை பார்த்ததே இல்லையாம்...
எனவே உன் முகத்தை,
எட்டி எட்டிப் பார்க்கிறது...
உன் கூந்தலில்,
ஒட்டிக் கொண்டிருக்கும்,
வெண்ணிற மல்லிகைகள்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)







