5

இயற்கைச் சீற்றங்கள்


உன் பார்வை பட்டு,
பூக்கள் எல்லாம் உதிரும்...
உன் இடை வளைவுகளில்,
செடி கொடிகள் படரும்...
வானத்திலிருந்து கிளம்பிய,
மழைத் துளிகளும்,
மண்ணைச் சேராமல்,
உன்னையே சுற்றி வட்டமிடும்...
சின்னச் சின்ன நட்சத்திரங்களும்,
அழகிய வெள்ளை நிலவும்,
விண் திரைக்குள் மறையும்...
உன்னுடைய மேனிக் குளிர்வை,
சற்றும் தாங்க இயலாமல்,
சூரியனும் போர்வைகுள் நுழையும்...
இந்த இயற்கைச் சீற்றங்கள்,
உன்னால் மட்டுமே நிகழும்!

ஆகையால் பெண்ணே,
வெளியில் எங்கும் அலையாமல்,
என்னுடைய மனதிற்குள்,
நிலையாய் தங்கிவிடு...
அந்த சீற்றங்களை எல்லாம்,
என்னுடைய மனது மட்டுமே,
சுகமாய் தாங்கிக் கொள்ளும்!

இன்னிசை விருதுகள்...


உன் விழி இமையில்,
படர்ந்துள்ள கருந்தோகைகள்,
என் உதடு பட்டு,
இசைக்கீற்றுகளை விரிப்பது...
நம் காதுகளுக்கு மட்டும்,
எப்பொழுதும் கேட்கிறது...
அந்த இசைக்கு வேறேதும்,
இணையில்லை என,
இயற்கையின் இன்னிசை விருதுகள்,
பல காத்துக்கிடக்கின்றன!

முத்தமாய் பனி மழை!


நெற்றி முட்டி,
கன்னங்கள் தேய்த்து,
ஒரு துளி முத்தமும்...
சிறு பார்வையோடும்,
அழகிய புன்னகையோடும்,
ஒரு சின்ன வெட்கமும்...
கைகளை பிடித்து,
நெற்றிப்பொட்டில் வைத்து,
சில அன்பான வார்த்தைகளும்...
நான் கேட்கும் பொழுது,
புன்னகையோடு வெட்கத்தையும்,
அன்பான வார்த்தைகளையும்,
உடனே தந்துவிட்டு...
முத்தத்தை மட்டும்,
கடன் வைக்கிறாய்...

கடனை எல்லாம்,
கொஞ்சம் கொஞ்சமாய்,
அவ்வப்பொழுது தந்துவிடு,
முத்தத்தின் பனி மழையில்,
மொத்தமாய் நனைந்து,
என்னையும் நனைத்துவிடாதே!

மழை நின்றும் நனைகிறாய்!


மழை நின்ற போது,
என் சட்டைக்குள்,
முகம் புதைத்து...
என் நெஞ்சில்,
உன்னுடைய நினைவுகளின்,
அன்புத் தூரல்களில்,
அழகாய் நனைகிறாய்!

அடி பெண்ணே,
இது என்ன விளையாட்டு?
3

பூக்களுக்கு பிறந்தநாள்!


உன் உதடுபட்டு,
விரியும் பூக்கள் எல்லாம்,
இயற்கையாய் மலரவில்லை...
வெட்கம் தாங்காமல் வெடிக்கின்றது!

என் உதடுகளும்,
நாணல் கொண்டு,
அழகாய் வெடிக்க,
காத்துக் கிடக்கின்றது!
4

விழிச்சிறையில்...


கவிஞர்களின் கவிதையிலும்,
ஓவியனின் தூரிகையிலும்,
சிற்பியின் உளியிலும்,
அடங்க மறுக்கும்...
அமைதி என்னும்,
அணிகலன் கொண்ட,
அழகிய பெண்ணே!
என் கண்களுக்குள் மட்டும்,
எவ்வாறு சிறைபட்டு இருக்கிறாய்?
0

யாரும் அரியாத உண்மை...


நட்சத்திரங்கள் ஒன்று கூடி,
விரிக்கும் வெள்ளைக் கீற்றுகளின்,
அழகிய கூட்டத்தில் இருந்து,
வருபவள் தேவதை என்றால்...
உன் பெயர் என்ன?

வண்ணங்கள் பல பெற்று,
வரையப்பட்ட பெண் ஓவியத்தில்,
இருப்பவள் அழகி என்கிறார்கள்...
அப்படியெனில் நீ யார்?

பெண்ணே, நீ...
தேவதைகளின் தேவதை என்பதும்,
அழகிகளின் அரசி என்பதும்,
யாரும் அரியாத உண்மையடி!
0

வெள்ளை நிறக் காதல்கள்!


பெண்ணே,
நீ எந்தன் வானம்!
உன்னுடைய விழிகள்,
அதிகாலை சூரியன்கள்!

ஆகையால்...
மேல் இமையும், கீழ் இமையும்,
சேரும் ஒவ்வொரு கனமும்...
எனக்கு ஆயிரம் இரவுகள்!

அந்த இரவுகளின் நிலவாய்,
உன் முகம் பொழிவதெலாம்...
அமைதியை பெருக்கும்,
அன்புகள் நிறைந்த,
வெள்ளை நிறக் காதல்கள்!
3

சன்னலோரம் ஒரு பார்வை...


வகுப்பறை வாசலில்,
என்னை பார்த்து,
விடை பெறுவதற்கு,
கை அசைத்துவிட்டு...
பிரிய மனமின்றி,
சன்னலின் ஓரம்,
எட்டிப் பார்த்து,
வருத்தத்துடன் நீ சென்றதும்...
உன்னுடயை பிரிவால்,
பள்ளியின் முதல் நாளில்,
நான் அழுத அழுகையும்...
அழகிய கவிதைகள்!
3

அழகான பொய்கள்!


பூமி தொட விழையும் மழையின்,
நீர்த் துளிகள் என்னை தொடாமல்,
சேலைக் குடைகுள் என்னை மறைத்தாய்!

வெடிக்கும் இடி முழக்கம்,
என் காதுகளில் எட்டாமல்,
மார்போடு இருக்க அணைத்தாய்!

புன்னகையால் படம் எடுக்கும் மின்னலுக்கு,
முகம் காட்ட வேண்டாம் என்று,
என் கண்களையும் கைகளால் மூடினாய்!

இதனால்...
என்னை தூரலாய் தொட வந்த மழையும்,
எனக்காக இசை மீட்டி தந்த இடியும்,
என்னை படம் பிடிக்க வந்த மின்னலும்,
உன்னை பார்த்து பொறாமை பட்டதாய்...
ஒவ்வொரு முறையும் இவ்வளவு அழகாக,
என்னிடம் எதற்காக பொய் சொல்கிறாய்?