0

நண்பன்


வைகறையில்...
இளங்காந்தற் கதிரவனைக் கண்டு,
நீராய் உருகும் பனித்துளியே...
உன்னைப் போன்றே,
உருகி வழிய,
ஒவ்வொரு உயிருக்கும்...
புன்னகை பூவோடு,
நட்பை பகிரும்,
தோழமை வேண்டும்!
0

நிலவே முகம் காட்டு


அழகிய வெள்ளி நிலவை,
இதுவரை பார்த்ததே இல்லையாம்...
எனவே உன் முகத்தை,
எட்டி எட்டிப் பார்க்கிறது...
உன் கூந்தலில்,
ஒட்டிக் கொண்டிருக்கும்,
வெண்ணிற மல்லிகைகள்.
4

வார்த்தைகள் இல்லா கவிதை...


இரு வரிகள்...
அதில் வார்த்தைகள்,
எதுவும் இல்லை...
ஆனாலும் கவிதை!

உன் விழியில் வரைந்த,
கண்மை வரிகள்...

சிறுபிள்ளையாய் செய்வாயா?


இறைவா...
தாயின்...
அன்பான முத்தமும்,
ஆராரிரோ தாலாட்டும்,
அழகிய கொஞ்சலும்,
பாசமிகு அரவணைப்பும்,
அவள் மடி உறக்கமும்,
மீண்டும் பெற...
சிறுபிள்ளையாய் செய்வாயா?
0

இறைவா...


அன்பாலே உலகம் செய்து,
அழகான உறவுகளும் செய்தாய்!
உயிர்களை பிறக்கச் செய்து,
அதனை உடலுக்குள் புகவும் செய்து,
இறப்பையும் அறிய செய்தாய்!

மலருக்கு வாடை தந்து,
மலரும் வினை செய்தாய்!
சரிகம இசை தந்து,
அதனை காற்றினில் ஒலியாகச் செய்தாய்!
ஒலியை உணரச் செய்து,
மொழியை பிறக்கவும் செய்தாய்!

சூரிய குடும்பம் படைத்து,
அதனுடன் நிலவும் படைத்து,
ஒளியை எங்கும் படரச் செய்தாய்!
இரவு பகல் மாறுதலின்...
பாகுபாட்டையும் உணரச் செய்தாய்!

இறைவா...
இவை அனைத்தையும் செய்யச் சொல்லி,
உன்னை செய்து அனுப்பியவன் யாரைய்யா?
5

இயற்கைச் சீற்றங்கள்


உன் பார்வை பட்டு,
பூக்கள் எல்லாம் உதிரும்...
உன் இடை வளைவுகளில்,
செடி கொடிகள் படரும்...
வானத்திலிருந்து கிளம்பிய,
மழைத் துளிகளும்,
மண்ணைச் சேராமல்,
உன்னையே சுற்றி வட்டமிடும்...
சின்னச் சின்ன நட்சத்திரங்களும்,
அழகிய வெள்ளை நிலவும்,
விண் திரைக்குள் மறையும்...
உன்னுடைய மேனிக் குளிர்வை,
சற்றும் தாங்க இயலாமல்,
சூரியனும் போர்வைகுள் நுழையும்...
இந்த இயற்கைச் சீற்றங்கள்,
உன்னால் மட்டுமே நிகழும்!

ஆகையால் பெண்ணே,
வெளியில் எங்கும் அலையாமல்,
என்னுடைய மனதிற்குள்,
நிலையாய் தங்கிவிடு...
அந்த சீற்றங்களை எல்லாம்,
என்னுடைய மனது மட்டுமே,
சுகமாய் தாங்கிக் கொள்ளும்!

இன்னிசை விருதுகள்...


உன் விழி இமையில்,
படர்ந்துள்ள கருந்தோகைகள்,
என் உதடு பட்டு,
இசைக்கீற்றுகளை விரிப்பது...
நம் காதுகளுக்கு மட்டும்,
எப்பொழுதும் கேட்கிறது...
அந்த இசைக்கு வேறேதும்,
இணையில்லை என,
இயற்கையின் இன்னிசை விருதுகள்,
பல காத்துக்கிடக்கின்றன!

முத்தமாய் பனி மழை!


நெற்றி முட்டி,
கன்னங்கள் தேய்த்து,
ஒரு துளி முத்தமும்...
சிறு பார்வையோடும்,
அழகிய புன்னகையோடும்,
ஒரு சின்ன வெட்கமும்...
கைகளை பிடித்து,
நெற்றிப்பொட்டில் வைத்து,
சில அன்பான வார்த்தைகளும்...
நான் கேட்கும் பொழுது,
புன்னகையோடு வெட்கத்தையும்,
அன்பான வார்த்தைகளையும்,
உடனே தந்துவிட்டு...
முத்தத்தை மட்டும்,
கடன் வைக்கிறாய்...

கடனை எல்லாம்,
கொஞ்சம் கொஞ்சமாய்,
அவ்வப்பொழுது தந்துவிடு,
முத்தத்தின் பனி மழையில்,
மொத்தமாய் நனைந்து,
என்னையும் நனைத்துவிடாதே!

மழை நின்றும் நனைகிறாய்!


மழை நின்ற போது,
என் சட்டைக்குள்,
முகம் புதைத்து...
என் நெஞ்சில்,
உன்னுடைய நினைவுகளின்,
அன்புத் தூரல்களில்,
அழகாய் நனைகிறாய்!

அடி பெண்ணே,
இது என்ன விளையாட்டு?
3

பூக்களுக்கு பிறந்தநாள்!


உன் உதடுபட்டு,
விரியும் பூக்கள் எல்லாம்,
இயற்கையாய் மலரவில்லை...
வெட்கம் தாங்காமல் வெடிக்கின்றது!

என் உதடுகளும்,
நாணல் கொண்டு,
அழகாய் வெடிக்க,
காத்துக் கிடக்கின்றது!