இலைகள்

உன் விழிகளுக்குள்
மெளனமெனும்
மொழியதற்கு
உயிர் கொடுக்க
வரிகளாய் இளங்கொடி
படர்ந்திருக்க...

அன்பெனும் காற்றினிலே
வரிகள் முற்றியே
கவிதைகளாய் மாறிய
இலைகள் உதிர்த்திடவே
எனை வந்து சேர்கிறதே!

சேர்ந்தவை கூட்டமிட்டு
உயிர் பெற்று
மீண்டுமிங்கே படர்கிறதே!
இன்பங்கள் தெரிக்கிறதே...

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக