0

புதைகுழி

பணமெனும் புதைகுழியில்
மனித உயிர் சுகம் காணுமோ?

அன்பும் அரவணைப்பும்
மனிதா நின் நிலைக் கண்டு
எட்டிப் பார்த்து
உனையெழுப்பி கொணர்ந்து
புதுவுலகம் காட்டுதடா!

நீ அதனையும்
உள்ளிழுத்ததனால்
மல்லிகை வாடை
துர்நாற்றத்தில்
வலுவிழந்து போனதடா!

நீ வெளியே வந்தாலும்
எந்தன் சிறு கண்ணீர் துளிகள்
நின் அழுக்கை களையாது
மனித மனங்களின்
மழை அன்று வேண்டுமடா
அன்பால் நீ நனைய

திருமணம்

தட்சனை வேண்டுமாம்
பெண்ணவள் வேங்கையின்
கை கோர்க்க

பூமகள் கோளத்தை
தவமிருந்து வளர்த்தவன்
பண இச்சை பரிமாற்றம் கேட்கும்
தரங்கெட்ட கூட்டத்திற்கு
உறவு சேர்த்து வைப்பதுவோ
திருமணம்

பெண் சிசுக் கொலை

ஐயிரண்டுத் திங்கள்
கருவறைத் தாங்கிய
வலியொன்றும் பெரிதில்லைத்
தாயே...

கள்ளியரைத்து நீ தரும்
உயிருருஞ்சும் பாலை
நின் மனதோடு
கருங்கல் நட்டு
உரைந்த உயிர் வலியை
காட்டில்
0

மூக்குத்தி

மொட்டுத் தண்டு மலரின் மேலே
தேன் தேடும் மூக்குத்தி
3

உயிரற்ற பூக்கள்

செடியில் உள்ள பூக்கள் யாவும்
உயிரற்று பிறக்கிறது
உன் கூந்தல் ஏறி நின்றி
உயிர் பெற்றுச் சிரிக்கிறது
நின் கூந்தல் வாடைக் கண்டு
பூக்கள் நாணி மடிகிறது
0

சூரியப் பெண்ணே

இலைத் தட்டு மனதின் மேலே
பனிக் கூட்டம் கூடு கட்டி
சூரிய வரவைப் பார்த்திருக்கும்
நினைவுகளே...

அவள் வரவைக் கண்டவுடனே
வண்ணத்துப் பூச்சிகளாய்
சிறகடித்துப் பறப்பதேனோ?

பனிக் கூட்ட குளிர்ச்சி விரட்டி
சூரியப் பெண் கதிர்கள் யாவும்
மழைச் சாரல் தெரித்தது போதும்!

என் மனமுரைந்து என்னவளே...
சூரியப் பெண்ணே நீ
நடுங்க வேண்டாம்!

என் இரத்த மொட்டுக்கள் வந்து
மனக் கூரைக்குள் வாழும் உன்னை
குளிர் துரத்தி வெப்பம் தரிக்கும்.
2

இனிமை

நிறமற்ற நீரும் உருமாறி
கருநிறம் கொண்டது

நிலாப் பெண் சிரிப்பினிலே
மேகங்கள் நாணமுற்று
கருத்துப் போனது

நிலவழகால் ஈர்க்கக் கண்டு
நிழலாடச் செய்து
நீரும் சலனப்பட்டது

மேகக் கருஞ் சாந்தை
மரமேனோ கடன் வாங்கி
மேனி கருத்து
உயிரற்று நிற்கிறது

தலையை இடைச் செருகிய
கால்களை அணைத்தபடி
கைகள் கோர்த்தமர்ந்தவாறு
நின் நினைவுகளோடு
நீரின் சலனத்தை கலைத்தபடி
மெளனமாய் நானிருந்து
நல்லிரவைக் கழிக்க வேண்டும்

என் துணையென
நீயில்லா இரவினிலே...

சில நேரம் பிரிவும்
இனிமை தான் பெண்ணே...
4

வெற்றி

மண்ணில் புதையுண்டு
சில காலம் கடத்திவிட்டு
பச்சிளஞ் சிறகுகளை
நிலத்தைக் குடைந்து
இலைகளாய் கையசைத்து
வெளிவரும்
தளிரின் பெருமை
இதுவல்ல
நீரையுறிஞ்சி
சூரியச் சுடரிழுத்து
இளங் குழந்தையாய்
புன்னகைப் பூக்கும்
மொட்டுக்கள் தெரிவதும்
பெருமையல்ல
பெற்ற குழந்தை
வாழ்வது ஒருநாள்
எனினும்
மகிழ்ச்சியாய் மலரும்
மலர்கள் தான்
நின் வெற்றி
0

மழை

முதிர்ந்த முத்துக்கள்
உதிர்ந்து சேர்வது
நிலத்தினிலே...
மழையே

நிலத்தரைந்த
மெய் சிலிர்ப்பை
நின் சில்லொலி
சொல்லும் நேரத்தில்
மெளனமாய்
மண் சிவந்து
மணம் வீசி
வாடைத் தெரித்தது
0

கண்ணாடி

மனமென்னும் இருட்டறையில்
நினைவுகளைப் புதையலிட்டேன்
இருட்டினில் உருமாறி
நிழலுருவம் காட்டும்
ஊடுருவல் கண்ணாடிபோல்
என் நினைவுகள்
நின்னுருவம் காட்டத்தான்