2

முகம் மலரும்

உன்னைப் பார்த்த
நாளி லெல்லாம்
சுகமான உறக்கம்
விழியோடு உருகும்

நினைவுகள் ஆசைகள்
இவை யாவும்
ஒன்றாய் சேரும்

இனிமையின் அமுதாய்
கனவுகள் மலரும்

கனவின் திரையில்
என்னவளே நிந்தன்
முகம் மலரும்
2

தவிக்க வைத்த தனிமை

விண் திரையில்
வெண்மை படர்ந்திருக்க
மூட்டங்கள் மறைத்தாலும்
எட்டிப் பார்க்கும்
நிலவிற்குத் தெரியும்
என் சோகம்

பூட்டி வைத்த
இருள் கொட்டகையில்
என்னைச் சுற்றி
பல நட்சத்திர
உறவுகள் இருந்தும்
நீயில்லா இரவு
வீணாகிப் போனதடி

நிலவைப் பார்க்கும்
ஒவ்வொரு கனமும்
நினைவுகள் யாவும்
ஒன்றாய் சேரும்
வெள்ளி நிலவிற்கு
கரு வண்ணம்
அள்ளிப் பூசும்
3

கானம்

இருளண்டிய மேகம்
தன் நுதலொடு
வெண்ணிற பொட்டுடுத்த
நிலவை ஒட்டும்
வேலை யதனில்
தன்மையனாய் மாறிய
மரம் ஈந்த
கானம் அதை
தனியனாய் உளவும்
இளங் காற்றரசன்
மெல்லியதாய் இசையுருக்கி
சலனத்தில் சுருண்டு
இடர்ப்பட்டுத் திரியும்
ஓடை நீரில்
இடைச் செருகி
இசை கரைக்கும்
3

தொடரும்...

கருங் குடை விரித்து
நிலவு தொங்கும்
ஒற்றைக் கண் மேகத்தின்
மேனி மணக்கச
வெள்ளிக் கற்கள் யாவும்
மின்னற் கீற்றாய்
விழியோரம் சிரித்து ஒளிரும்
நட்சத்திரக் கூட்டம்
பார்வையால் உள் ளிழுத்து
மனதோடு படரும்
எந்தன் கனவிலும் தொடரும்...

நாட் குறிப்பு

சூரியன் உதிர்ந்து
நிலவு குளிரும்
காலப் பொழுதில்
நினைவுகள் யாவும்
கவிதையாய் மாறி
ஆறாம் விரலாய்
கரம் தன்னில்
எழுதுகோல் பிறந்து
ஏட்டில் பதித்த
வரிகள் யாவும்
நின் முகத்தை
எந்தன் மனதோடு
வளர்பிறை யாக்கும்
0

அழகு மல்லி

குவிந்து உறங்கும் மல்லிகை
சூரிய விழியின் விடியலில்
இரவெலாம் படர்ந்த பனி
உருகுதல் கண்டு சிறகுகளாய்
தன் இதழ்கள் விரித்து
துயில் களையும் தோற்றம்
எங்கு காணினு மழகு

என்னவள்

உறவுகளின் கூடுதல் காண வந்த
பெண்ணவ ளென்றும் என் தாயவள்
ஈன்றெடுக்காத கோமகள் புது மணமகள்
என வந்த அர்த்தநாரிக் குலமகள்!
2

அழுகை

உமிழ் நீர்த் தெரித்து
புது வுலகங் கண்ட
சின்னஞ் சிறு பிள்ளை
பிறப்பை உலகு ணர்த்த
தாமாய் கற்றுத் தெளிந்த
அழகிய முதற் கவிதை
கமலச் செவ்விதழ் விரித்து
ஒளித் தெரிக்கும் அழுகை
2

கனவு

விடியற் காலைப் பொழுது
கருவிழிப் பார்வைக் கதிர்கள்
ஊடுருவல் உரைந்த தருணம்
ஊரை விழுங்கிய பனிக்கோர்வை
குகைக்குள்ளே மறைந் திருந்த
தேவதையவள் வெளி யொளிர்ந்து
விரலால் மொழிப் பேசி
அருகிலே எனை யழைத்தாள்
தூரத்தில் அவள் இருக்க
எந்தன் தலை வருடல்
நான் உணர்ந் தெழுந்தேன்
வருடியதாய் உணர வில்லை
அன்பை யுணவாக்கி உண்டதாய்
கூறியது மனப் பசி
ஏனென்றால் வருடிய விரல்கள்
தாயின் ஐம் பரிவுகள்
3

அனிச்சம்

தொடு மலர்ச் செய்கையில்
தலைத் தொங்கும் அனிச்சத்தை
பசுமைப் படர்ந்த காட்டிற்குள்
இடர் படும் செடிதனை
பரைத்துத் தேடினள் கண்டதும்
ஐந்தண்டு கை யதனில்
பிடுங்கி நட்டாள் கூந்தலில்
வாடியது அனிச்ச மல்ல
பெருகிய தவள் நாணம்

தொடுஞ் செயலி லுருகும்
அனிச்ச மலர் போல
நாயகன் மூச்சுக் காற்றிலும்
உருகி வழியும் பெண்மை