
வாய் திறவாது வெட்கத்துடன்,
நாணி பிறக்கும் நகையும்...
இயற்கையின் வாடை பிடுங்கி,
மேனி நிறைத்த மணமும்...
பாதச் சுவடுகள், மணல் அலந்து,
தூரம் சென்று, பார்க்கும் பார்வையும்...
துன்பம் தலை தூக்கும் காலத்தில்,
ஆறுதல் தரும், நின் வார்த்தைகளும்...
நின் மடியில் நானிருக்க,
தலை கோதும் விரல்களும்...
என்றென்றும் வேண்டுமடி!
தாயாய் தாலாட்ட...
சேயாய் விளையாட...
தோழியாய் மனம் பகிர...
என்றென்றும் வேண்டுமடி
நீ எனக்கு...








