
கொஞ்சி கொஞ்சி
என்னிடம் பேசுவாய்...
மிருதுவாய் வருடி
கன்னத்தை கிள்ளுவாய்...
தோள் சாய்ந்து
எண்ணங்கள் பகிர்வாய்...
என்னில் சாய்ந்து
வெட்கமும் உதிர்ப்பாய்...
விரல்களின் மீது
முத்தமும் இடுவாய்...
நின் வார்த்தைகளால்
அன்பும் பொழிவாய்...
இப்படி எல்லாம்
சின்ன சின்னதாய்
குறும்புகள் செய்வாய்!
இவை அனைத்தையும்
நான் இரசிக்க
வெகு நேரம்
உனக்காக காத்திருக்கிறேன்!








