பூக்கள் யாவும்
மலராது, பொய்த்து,
மடிந்து போகும்...
பயிர்கள் யாவும்
நாணல் காணாது,
அறுவடை சேராது,
காய்ந்து போகும்...
வற்றா நெய்தலும்,
நீர் காய்த்து...
பாலை நிலமாய்,
மாற்றமும் காணும்...
மனிதா...
இந்நிலை வாய்க்கும் காலம்
வெகு தூரம் இல்லை...
நின் துயர் கண்டு,
நான் வருந்தி
மடியும் காலமும்
தொலைவில் இல்லை...
இப்படிக்கு,
பசுமை
பசுமை





