என்னை இழுத்துக் கொண்டு அந்தரத்தில் குதிக்குதடி மனது... அழகாய் குடை விரிக்கும் உன் தாமரை இதழ்களால்... ஈர்ப்பு விசையறியாது உதிர்க்கும் உன் சின்னஞ்சிறு புன்னகையால்... வண்ணமறியாது மலரும் உன் கன்னக் குழியால்...
என்னை ஈன்றவள் ஈய்ந்த உடலும் ஈன்றவள் துணையான் ஈய்ந்த உயிரும் உரு கொண்டு உள் மனதில் நினைந்து நினைந்து தேனாய் உருகி பற்பல போற்றிகள் ஈன்றோரை பாடுதாம்...