4

ஊமை பொம்மைகள்



என்ன அதிசயம் செய்தாயடி?
என்னை சுற்றியிருக்கும்...
உருவங்கள் யாவும்,
பொம்மைகளாய் தெரியுதடி...
என் அருகில்,
நீ இருந்தால்...

என்ன அதிசயம் செய்தாயடி?
என்னை சுற்றியிருக்கும்...
பொம்மைகள் யாவும்,
ஊமையாய் போனதடி...
சிரித்து புன்னகைத்து,
நீ பேசினால்...

என்ன அதிசயம் செய்தாயடி?
என்னை சுற்றியிருக்கும்...
ஊமைகள் யாவும்,
உவமையாய் போனதடி...
கன்னத்தை கிள்ளி,
நீ கொஞ்சினால்...


என்ன அதிசயம் செய்தாயடி?
என்னை சுற்றியிருக்கும்...
உவமைகள் யாவும்,
உருகியே போனதடி...
எனக்காக நீ தந்த,
அழகான முத்தத்தால்...
0

நிழல்



என்னுடன் வரும் நிழலை,
எனதென்று நினைத்திருந்தேன்...
எனக்காக நீ அனுப்பிய,
நினைவுகள் என்று,
இன்று தான் உணர்ந்தேன்...
உந்தன் பிரிவில்
0

எங்கே இருக்கிறாய்?


மொட்டு விரியா,
மல்லிகையை பரித்து,
கருஞ் சாந்திட்டு,
மலர்ந்ததுள்ள,
நின் கண்களும்...

நீர் பகைமை கொண்டாலும்,
நீரோடு உறவாடும்...
அழகிய புன்னகையொடு,
தேன் தமிழ் பயின்ற...
தாமரையாய் தோன்றும்,
நின் இதழ்களும்...

மழை ஓய்ந்த,
வெளிர்ந்த வானில்...
சிவந்த சூரியனாய்,
தழல் தெரிக்கும்...
நீ இட்ட,
நுதற் பொட்டும்...

என்னை ஒவ்வொரு கனமும்,
வா என்றே அழைக்குதடி...
ஆனால் பெண்ணே நீ,
என் அருகில் இல்லையடி...
3

அந்தரத்தில் குதிக்குதடி மனது



என்னை இழுத்துக் கொண்டு
அந்தரத்தில் குதிக்குதடி மனது...
அழகாய் குடை விரிக்கும்
உன் தாமரை இதழ்களால்...
ஈர்ப்பு விசையறியாது உதிர்க்கும்
உன் சின்னஞ்சிறு புன்னகையால்...
வண்ணமறியாது மலரும்
உன் கன்னக் குழியால்...
7

ஓரக் கண்ணால்...



ஓரக் கண்ணால்
பார்த்துக் கொண்டு
என்னைக் கடந்து
செல்லும் பொழுது
உன்னுடனே வந்துவிடுகிறது
என் மனது...

இனியும்
என்னைக் கடந்து
செல்லும் பொழுது
ஓரக் கண்ணால்
பார்த்தால்...
எந்தன் உடலில்
மீதம் இருக்கும்
உயிரும்
உன்னுடன் வந்துவிடும்...

இப்போது நீ
என்ன செய்யபோகிறாய்?
0

இப்படிக்கு பசுமை - 4



என்னை தொட்டுச்
செல்லும் போது,
எந்தன் குளிர்ச்சியை
களவாடிச் சென்றாய்...

போகும் வழியதனில்,
மனித உயிர்களுக்கு,
தானமாய் தந்தாய்...

அன்று...
எங்கு காணினும்,
பச்சை மிளிர்ந்தது.
இன்று...
வறட்சியே எஞ்சியுள்ளது.

இத்தருணத்தில்,
மனித உயிர்களுக்கென,
குளிர்ச்சியை கேட்டால்,
நான்
என்ன செய்வேன்?

இப்படிக்கு,
பசுமை
4

முத்தம்



வெளிச்சம் இல்லா,
இதழ்களுக்கு இடையில்,
சத்தம் மட்டுமே,
சக்கரவர்த்தி...
அங்கே,
அவளும் நானும்
மெழுகுவர்த்தி...
5

காதல் கடிதம்



உன் பார்வையால்,
எந்தன் வெட்கங்கள்...
உதிரக் கண்டேன்!

உன் தொடுகையால்,
எந்தன் நாணம்...
நொறுங்கக் கண்டேன்!

உன் சிரிப்பினில்,
எந்தன் மனம்...
சுருங்கக் கண்டேன்!

உன் அணைப்பினில்,
எந்தன் ஊணுடல்...
உருகக் கண்டேன்!

எந்தன் உயிரே...
நீ இல்லாத,
இடங்களில் எல்லாம்,
தனிமையில்,
வெறுமையை மட்டுமே,
நான் கண்டேன்.
வாடை தேடும் மலராய்,
உன் காதலி...
5

பூ முகம்



காந்தள் பூவின்,
இரு விரல்கள் பிரிந்து...
குவளைப் பூவில்,
மலர்ந்தது கண்டேன்...

மாலை கதிரவன்
மத்தியில் இருக்கும்,
காந்தள் மலராய்
நின் முகம் கண்டேன்...
தேன் ஊறா,
குவளை மலராய்,
நின் இதழ்கள் கண்டேன்...

பூவினுள் மலர்ந்த
முதற் பூவாய்
நின் முகம் கண்டேன்...

0

ஈன்றோர் வாழ்த்து



என்னை ஈன்றவள்
ஈய்ந்த உடலும்
ஈன்றவள் துணையான்
ஈய்ந்த உயிரும்
உரு கொண்டு
உள் மனதில்
நினைந்து நினைந்து
தேனாய் உருகி
பற்பல போற்றிகள்
ஈன்றோரை பாடுதாம்...