கல்லூரி விடுதியில், என்னுடைய அறையில், நெடுநாட்களாக... என்னை சுமந்த நாற்காலிகளும், சாய்ந்து நின்ற கதவுகளும், எந்தன் உறக்கம் காணாத தலையணையும், ஆயிரம் ஆயிரம் கதைகளாய்... உந்தன் பிரிவின் வலியையும், உந்தன் அன்பின் இழப்பையும், கவிதையாய் சொல்லும்!
கல்லூரி விடுதியின், தாழிட்ட அறையில்... பாலையில் எறியும், மனித உயிரின், பெருத்த வலியோடு, ஒவ்வொரு நாளும், விடைபெறும் என்று... உன்னை பிரியும், அன்றைய பொழுதில், நான் அறிந்திருக்கவில்லை!