
பிள்ளையின் சிரிப்பில்
ஆயிரம் பருக்கைகள்
உண்டதாய் எண்ணுவாய்...
புரியா பிதற்றலில்
ஆயிரம் அர்த்தங்கள்
கண்டதாய் அறிவாய்...
விழியில் மையிட்டு
நுதற் பொட்டிட்டு
ஆயிரம் ஓவியங்கள்
ஒன்றாய் கண்டதாய்
ஆச்சரியத்தில் கொஞ்சுவாய்...
கன்னங்கள் கிள்ளி
அழகாய் கொஞ்சி
வருடி முத்தமிடுவாய்...
இவைகளை எண்ணியே
எந்தன் மனமின்று
பிள்ளையாய் மாறியதே
இவையெல்லாம் என்னைத்
தொட்டிலிட்டு தாலாட்டியதே








