4

வெற்றி

மண்ணில் புதையுண்டு
சில காலம் கடத்திவிட்டு
பச்சிளஞ் சிறகுகளை
நிலத்தைக் குடைந்து
இலைகளாய் கையசைத்து
வெளிவரும்
தளிரின் பெருமை
இதுவல்ல
நீரையுறிஞ்சி
சூரியச் சுடரிழுத்து
இளங் குழந்தையாய்
புன்னகைப் பூக்கும்
மொட்டுக்கள் தெரிவதும்
பெருமையல்ல
பெற்ற குழந்தை
வாழ்வது ஒருநாள்
எனினும்
மகிழ்ச்சியாய் மலரும்
மலர்கள் தான்
நின் வெற்றி
0

மழை

முதிர்ந்த முத்துக்கள்
உதிர்ந்து சேர்வது
நிலத்தினிலே...
மழையே

நிலத்தரைந்த
மெய் சிலிர்ப்பை
நின் சில்லொலி
சொல்லும் நேரத்தில்
மெளனமாய்
மண் சிவந்து
மணம் வீசி
வாடைத் தெரித்தது
0

கண்ணாடி

மனமென்னும் இருட்டறையில்
நினைவுகளைப் புதையலிட்டேன்
இருட்டினில் உருமாறி
நிழலுருவம் காட்டும்
ஊடுருவல் கண்ணாடிபோல்
என் நினைவுகள்
நின்னுருவம் காட்டத்தான்
2

முதல் ஹைகூ

மெளனமும் அழகு தான்
உதட்டோடு அல்ல
உந்தன் விழியோடு

குடும்பம்

ஐயிரண்டுத் திங்கள்
கருக் கல்லை
சிறை வைத்து
உயிரை உளியாக்கி
உடற் சுத்தியலால்
உயிரடித்து
நீ செதுக்கி வெளியுமிழ்ந்த
பேதையொன்று...
ஒருநாள் உனக்குப்
பெயர் சூட்டும்
அம்மா என்று...

உன்
சுட்டு விரல் நீட்டியே
நீ பெற்ற
புதுப்பெயர் போல்
தலைவனவன் பெற
ஈகைக் கொண்டு
பேதைக்கு
நீ காட்டும்
புதிய முகம்
அப்பா...

ஆசை ஆசையாய்
அருகே வந்து
தன் மடியில் பேதையை
தொட்டிலிட வேண்டுமாய்
இச்சைக் கொள்ளும்
சிறு தளிர் கொழுந்து
நீ செதுக்கிய
உயிர் பெற்ற
முதற் சிற்பம்...
0

இச்சை

இருட்டறையின்
வெளிர் ஒளியில்
மறுவுயிர் பெற
உயிர் தெரித்து
உறங்கும் நேரத்தில்
என் மெளனத்தை
காற்றுடன் கலந்து
நினைவுகள் யாவும்
இசைப் பாடும்...

இரவின் மெளனத்தை
விழித்திருந்து இரசிக்க
வேண்டுமாய் இச்சை
எனக்கு...
0

உறக்கம்

கண்கள் முன் நீளத் திரையிட்டு
கருஞ் சாந்து பூசிவிட்டு
நட்சத்திரங்களை தூவியே
நிலவென்னும் பொட்டு வைத்தேன்
இரவென்னும் தேவதையை இப்படியே
தினம் தினம் நான் செதுக்கி
ஓவியத்தை இரசித்த வண்ணம்
உறக்கமெனும் ஊர் சென்றேன்
0

கண்ணா

மூங்கிலின் சிறு விரலைத்
துளையிட்டுத் திருகிய
புல்லாங்குழல்
உன் கையில் தான்
இருக்கையில் எத்தனையழகு
அதனினும் அழகு
நிந்தன் வித்தையால்
எழும் உச்சியுந்தி
துளையிட்டுச் சென்று
மெய் எலாம் திருடும்
குறுகிய துளைச் சென்று
குளிர வைக்கும் காற்றினும்
மெல்லிய வருடல் இசை...
இதனை வேறெப்படி
நான் சொல்ல
கார் கண்ணா?
0

வருகை

ஒற்றைக் கால் ஓவியத்தை
சிதிலமடையச் செய்வது போல்
ஒலி ஒன்று கேட்டதனால்
சில்லென்று சிணுங்கும்
கொலுசு மணிகள் யாவும்
தேவதை நடப்பதாய்
சொல்லாமல் சொல்லியது.

தலைவியவள் தாழகற்றி
சுவரோடு சாய்ந்தபடி
ஏக்கத்தோடு எட்டிப் பார்த்தாள்
தலைவனவன் புன்சிரிப்பின்
மலர் பூவை மாலையாக்கி
கருங்காட்டு கூந்தலுக்கு
மணற் பரைத்து
நட்டு வைத்தாள்

தலைவனவன் வருகைக்கு
கொலுசு மணிகள் யாவும்
மெளனச் சிறை சேர்ந்ததென்ன?

காதல்

கண் சிமிட்டும் நேரத்தில்
என் மனக் கருவறையில்
மணியடித்து ஒலிக்கிறதே
நீ பேசும் வார்த்தைகள்
படிமனாய் படிகிறதே
காதலெனும் சுவற்றிற்குள்
என் மனம் புதைகிறதே!