உன்னை எண்ணி,
எழுதும் கவிதைகளில்...
பொய்கள் எல்லாம்,
பிழையாகிப் போனால்...
கவிதைகள் யாவும்,
மாயமாய் போகும்!
அதனால் தான்...
உன்னை பற்றிய,
அழகியல் கவிதைகளில்,
கற்பனை வண்ணங்கள்,
எப்பொழுதும் தூவுவதில்லை!
நீயும்... நானும்...
தினமும்...
வந்து வந்து போவதற்கும்,
பிறையாய் தேய்வதற்கும்,
நீ நிலவில்லை பெண்ணே....
என்னுடனே இருக்கும் விழி!
வருடந்தோறும்...
மழை மன்னன் சென்றதும்,
என்னை அணைக்க வருவதற்கு,
நீ மூடுபனியல்ல பெண்ணே...
எந்தன்,
உயிரை காக்கும் உடல்!
எப்போதும்...
ஓயாது கரையை அரிப்பதற்கு,
நீ அலையல்ல பெண்ணே...
என் துயரை போக்கி,
கண்ணீர் துடைக்கும் விரல்!
தனித்தனியாய் நிற்பதற்கு,
நீயும் நானும்,
வேறல்ல பெண்ணே...
நாம்,
கவிதைகள் பதிக்கப்பட்ட மடல்!
வந்து வந்து போவதற்கும்,
பிறையாய் தேய்வதற்கும்,
நீ நிலவில்லை பெண்ணே....
என்னுடனே இருக்கும் விழி!
வருடந்தோறும்...
மழை மன்னன் சென்றதும்,
என்னை அணைக்க வருவதற்கு,
நீ மூடுபனியல்ல பெண்ணே...
எந்தன்,
உயிரை காக்கும் உடல்!
எப்போதும்...
ஓயாது கரையை அரிப்பதற்கு,
நீ அலையல்ல பெண்ணே...
என் துயரை போக்கி,
கண்ணீர் துடைக்கும் விரல்!
தனித்தனியாய் நிற்பதற்கு,
நீயும் நானும்,
வேறல்ல பெண்ணே...
நாம்,
கவிதைகள் பதிக்கப்பட்ட மடல்!
புன்னகை வங்கி
முடிவில்லா கனவொன்று காண,
விடியாத இரவுகள் தொடரும்,
நாள் ஒன்று வேண்டுமடி...
அந்த கனவு முழுதும்,
அழகாக நீ நிறைந்து,
முத்தங்கள் வழங்க வேண்டுமடி...
ஒவ்வொரு முத்தத்தின்,
சின்னஞ்சிறு இடைவெளியில்,
பூக்கின்ற புன்னகையை,
நான் பறிக்க வேண்டுமடி...
நான் பறித்த,
உனது புன்னகையை,
எனது விழிகளிலே,
சேமிக்க தோணுதடி!
என்றென்றும் மழைக் காலம்!
மனதிற்குள்...
ஆயிரம் ஆயிரம்,
உணர்வுக் கூட்டங்களால்...
என்றும் ஓயாது,
ஈரத்துடன் தெரிக்கப்படும்,
அன்புத் துளிகளும்...
மழை தான்!
ஆகையால்...
என் மனக் கூண்டில்,
என்றென்றும் மழைக் காலம்!
இவளும் ஒரு தேவதை...
இவள்...
கண்களுக்கு புலப்படாது,
விண்ணுலகில் திரியும்,
மாயமாய் மறையும்,
தேவதை இல்லை...
என் மனதிற்குள்,
என்றும் திரியும்,
அன்பை மட்டுமே,
என்னுடன் பகிரும்,
அம்மா என்னும்,
அழகிய தேவதை!
முத்தத்தால் என்னை மூழ்கடித்தாய்...
மொத்தமாய் வந்து,
முத்தத்தால் மூழ்கடித்தால்,
மூர்ச்சையாகிப் போவேன்,
என்று எண்ணியே...
மழைத் துளிகளாய்,
என்னிடம் வந்து,
வேண்டும் இடமெல்லாம்,
குளிர்ந்த முத்தங்களால்,
என்னை மயக்குகிறாய்...
என் மழையே!
காதலுடன் தென்றல்!
என் கண்கள் வழியே,
வழியும் அழகிய காதலுடன்...
உன்னைக் காண வேண்டுமென்று,
என் கண்கள் இரண்டையும்,
என்னிடமே கடனாய் வாங்கி...
நாள்தோறும் உன்னை சுற்றியே,
காதலுடன் திரிகிறது தென்றல்!
நிலா மகள்...
நிலவின் பொழிவுகளை,
பூக்களாய் எண்ணியே,
தினந்தோறும் கொய்வதால்...
நாள்தோறும் தேய்ந்து,
அமாவாசை நிலவாய்,
மறைந்தே போகிறான்!
உன் புன்னகைகளின்,
அழகிய பொழிவை,
தினந்தோறும் பரித்து...
தன் பொழிவை,
நாள்தோறும் கூட்டி...
பௌர்ணமியாய் வருகிறான்!
பால்வீதியில் ஒரு வீடு...
மின்மினி பூச்சிகளை,
வானில் சிதரடித்து,
நட்சத்திரங்கள் என்கிறாய்...
பிள்ளைகளின் புன்னகைகளை,
ஒவ்வொன்றாய் பரித்து,
வானில் படையலிட்டு,
சந்திரன் என்கிறாய்...
வேங்கை மரச்சாந்தை,
விரல் தூரிகையால்,
வண்ணமாய் பூசி,
மேகங்கள் என்கிறாய்...
இவை அனைத்தையும்,
கூண்டிற்குள் அடைத்துவிட்டு,
நீ வாழும்,
வீடு என்கிறாய்...
உனது வீட்டில்,
என் வரவை,
விடியலாய் காண்பாயோ?
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)









