3

உறக்கமும் அழகு... அழகு...


இதமான தென்றலும்,
நறுமண வாடையும்,
கலந்த காற்றால் வரும்,
உறக்கத்தை காட்டிலும்...
தலை வருடி,
தட்டிக் கொடுத்து,
தாலாட்டு கேட்டு வரும்,
உறக்கம்...
எவ்வளவு அழகு!
2

எனக்கும் ஆனந்தமே!!!


வாங்கி வந்த இனிப்பை,
ஒரு கடி கடித்தவிட்டு,
மீதத்தை தரும் பொழுது...
உந்தன் முகத்தில் பொழியும்,
அமிழ்தை உண்ட ஆனந்தத்தை,
காணும் பொழுது,
எனக்கும் ஆனந்தமே!!!
2

இன்பத்திலும் பேரின்பம்!


பண்பட்ட நிலத்தை,
பயனுற விதைத்து,
நெடுக வளர்ந்து,
எட்டிப் பார்க்கும்,
நெல்மணிகளைக் காணுதல்,
விதைத்தவனுக்கு இன்பம்!

அதைப் போன்றே...
பண்பட்டு வளர்ந்த,
பிள்ளையை காண்பது,
ஈன்றவளுக்கு...
இன்பத்திலும் பேரின்பம்!
4

விண்ணப்பங்கள்!


உன்னருகே இல்லாமல்,
பயில்வதில் மூழ்கிய,
கல்லூரி நாட்களையும்...
வேலை தேடியே,
அலைந்த நாட்களையும்...
மீட்டுத்தர வேண்டியே,
ஒவ்வொரு கடவுளுக்கு...
ஆயிரம் விண்ணப்பங்கள்!
4

பயணம்


எந்தன் உறக்கத்தில்,
கனவுகள் இல்லை!
எந்தன் மனதில்,
குழப்பங்கள் இல்லை!
எந்தன் கண்களில்,
நீரும் இல்லை!
எந்தன் நினைவில்,
நீயும் இல்லை!
ஆனால்...
பிரிவின் வலி மட்டும்,
எங்கிருந்தோ வாட்டுகிறது.
ஆகவே...
உந்தன் மடி உறங்க,
கல்லூரி விடுமுறையை நோக்கியே,
இனி நாட்களின் பயணம்...
0

ஈரம்


காதல் நிரப்பிய,
மனதை கேட்டேன்!

எந்தன் கண்களுக்கு,
ஈரத்தை தந்துவிட்டு...
உந்தன் கண்களிலிருந்த,
காதலை எல்லாம்,
வேறொருவனுக்கு தந்துவிட்டாய்!
0

கண்ணாடி குமிழ்


கண்ணாடி குமிழாய்,
கொடுக்கப்பட்ட மனதை,
ஆயிரம் துண்டுகளாய்,
உடைத்த பின்பு...
நீ நடக்கும் பாதையில்,
உன்னை வருத்தாது,
ஒவ்வொரு துண்டும்,
உதிர்ந்த மலராய்,
மாறுவதும் ஏனோ?

முதல் காதல்!


கரை அறியா கனவுகளும்,
உன்னை எண்ணியே மலர்ந்தன!
கனவுகளில் வாழ்தலும்,
உன்னுடனே நடந்தன!
ஆயிரம் ஆசைகளும்,
ஆயிரம் முத்தங்களும்,
உனக்காகவே பிறந்தன!

என்னுடைய...
முதல் காதலின்,
உன்னுடைய மறுப்பால்,
இவை யாவும்,
வேறோடு மடிந்தன...
2

காற்றோடு...


என்னை பார்க்கவே வந்துவிடும்,
உன்னுடைய வாரக் கடிதத்தையும்...
என்னுடைய நலமறிய அனுப்பப்படும்,
உன்னுடைய அலைபேசி குரலையும்...
எதிர்பார்த்து காத்திருந்த,
ஒவ்வொரு அழகான நொடியும்...
கல்லூரி விடுதியின் அறையில்,
காற்றோடு இன்றும் கலந்திருக்கிறது...
அன்பின் நினைவலைகளாய்!

எத்தனை எத்தனை கோலங்கள்...


தாயின் கருவில் உயிராகவும்,
அழுது பிறந்த பிள்ளையாகவும்,
தத்தித் தவழும் மழலையாகவும்,
உடன் பிறப்பிற்கு சகோதரியாகவும்,
நட்பிற்கு உற்றத் தோழியாகவும்,
இல்லறம் புகும் மனைவியாகவும்,
மணவாளனை ஈன்றவளுக்கு மகளாகவும்,
பிள்ளைபேறு பெற்று தாயாகவும்,
எத்தனை... எத்தனை... கோலங்கள் காண்கிறாய்,
பெண்ணே!