skip to main
|
skip to sidebar
கவிக்குடில் குமரன்
~ வினோத்குமார் கோபால் கவிதைகள் ~
5
எந்நாளும் இரவாக...
நின் கூந்தலின்
வாடை நுகர்ந்தே
இரவினில் பாதி போனதடி
நின் விழியில்
இதழ் வருடி
மீதியும் பகலாய் ஆனதடி
நிலவாய் நானிருந்தால்
சூரியனை சிறையிட்டு
விடியலையும் இரவாக்கி
உன் வசப்பட்டு இருப்பேனடி
9
தீண்டல்
விழியால், சுவாசக் காற்றல்,
விரலால், உள்ள உணர்வால்
எனைத் தீண்டிப் பார்த்தாய்
பயனேதும் இல்லை யென்று
சற்று விலகியே போனாய்...
பெண்ணே நின் தீண்டலை
யான் நிலையாய் பெறவே
சிலையாய் நின்றதை யறிவாயோ?
2
மழை
வரும் வரை
நின் வரவை
எதிர் பார்த்திருப்பேன்
வந்தபின் உன்னையே
பார்த்திருப்பேன்
அடி பெண்ணே
நீயும் மழை தான்
10
அம்மா
ஆயிரம் வார்த்தைகள்
ஆழத் தேடிடினும்
அன்பெனும் வார்த்தைக்கு
அகராதி கூறும்
அருஞ்சொல் அம்மா
4
தேனாய் ஊறியதே
அமுதாய் பொழியும்
அன்பின் நினைவால்
ஐவிரலில் தாழ்ந்தவனின்
தலையின் உச்சத்தில்
கருவிற் குயிரூற்றிய
தாயின் ஞாபகமெலாம்
உணவாய் ஏற்றி
வாயதனில் இட்டேன்
இட்டதெலாம் குழைந்து
தேனாய் ஊறியதே
2
அன்பின் அரணே
விழி உறங்கிடினும்
மறவாமல் எந்தன்
கால்களில் ஒன்றும்
கைகளில் ஒன்றும்
இயங்கா நிலையில்
உனை அணைக்கும்
அன்பின் அரணே
அன்னையே தாயே
1
வளர்பிறை
தேய்பிறைக் காணா
மனதோடு ஊறும்
மல்லிகையும் தோல்வியைத்
தழுவும் அன்பெனும்
இவளின் புன்னகையை
விழியின் துணையோடு
வார்த்தையால் கொணர்ந்து
காட்டும் அன்னையெனும்
திங்கற் பெண்ணிவளின்
அன்பிற்கு இவ்வுலகில்
உவமை உண்டோ
3
ஆலமரம்
எலும்புகள் தேய்ந்திடினும்
உடம்பொடு தலையும்
தொங்குதற் கண்டுவிடினும்
ஆலமரம் விழுதூன்றி
நின்றாற் போல்
கோலெனும் துணையதனை
கைகளிரண்டும் தேடிடினும்
தாயே எனக்காக
நிந்தன் யாக்கை
ஒருபோதும் ஓய்வறியாது
உழைத்தமைக் காண்
4
விழிப்பாவை
பார்வையொளி படரவிடும்
கரும்பாவை நீக்கி
இருவிழிக்கொரு நிலவாய்
உனையமர்த்திப் பார்த்திருப்பேன்...
இமையே கூரையாய்
வேய்ந்து அரவணைக்க
வெண்ணிற வான்
நினைத் தாங்க
அமைதியின் பிறப்பிடமாய்
அன்பினால் அலங்கரித்து
என்றென்றும் வாழ்ந்திருப்பாய்
ஈன்றெடுத்த அன்னையே
7
பிறவிப் பயன்
எனை யுணர்நத பின்பும்
தாயவள் கயற் விழியின்
ஓரமாய் ஈரம் கண்டால்
நிந்தன் துயர் நீரேந்த
விழியோரம் விரல் சேரும்
ஏந்திய விழிநீர் யாவும்
உட்புகுந்த என் மனதோரும்
வெண்பனி படர் மலையென
குவிந்த துயர் என்றும்
குருதியில் கலந்து அரிக்கும்
இவை யெலாம் வேண்டுமோ
பிறவிப் பயனுறா மனிதா?
அருங்கடவுள் அன்னைக்கு
அன்பெனும் பூவினால்
நின் ஆயுட்காலம்
முடிவுரும் வரை
என்றென்றும் ஆற்றி
பயனுருவாய் மனிதா
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பட்டியல்
▼
2024
(4)
▼
மார்ச்
(4)
அரங்கேற்றம்
மை விழிப் பாதை
ஆடை
அழகியலின் விதி மீறல்
►
2022
(5)
►
அக்டோபர்
(4)
►
ஜனவரி
(1)
►
2020
(1)
►
ஏப்ரல்
(1)
►
2018
(1)
►
நவம்பர்
(1)
►
2014
(2)
►
ஏப்ரல்
(2)
►
2013
(19)
►
டிசம்பர்
(4)
►
ஆகஸ்ட்
(5)
►
ஜூலை
(7)
►
மே
(1)
►
ஜனவரி
(2)
►
2012
(4)
►
மார்ச்
(1)
►
பிப்ரவரி
(2)
►
ஜனவரி
(1)
►
2011
(53)
►
நவம்பர்
(2)
►
செப்டம்பர்
(3)
►
ஆகஸ்ட்
(5)
►
ஜூலை
(6)
►
ஜூன்
(3)
►
மே
(8)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(5)
►
பிப்ரவரி
(9)
►
ஜனவரி
(7)
►
2010
(43)
►
டிசம்பர்
(4)
►
நவம்பர்
(6)
►
அக்டோபர்
(4)
►
செப்டம்பர்
(3)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூலை
(1)
►
ஜூன்
(4)
►
மே
(1)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(8)
►
பிப்ரவரி
(2)
►
ஜனவரி
(3)
►
2009
(19)
►
டிசம்பர்
(2)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(1)
►
செப்டம்பர்
(1)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூன்
(3)
►
மே
(3)
►
ஏப்ரல்
(2)
►
பிப்ரவரி
(3)
►
ஜனவரி
(1)
►
2008
(36)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(1)
►
செப்டம்பர்
(1)
►
ஆகஸ்ட்
(4)
►
ஜூலை
(2)
►
ஜூன்
(7)
►
மே
(2)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(4)
►
பிப்ரவரி
(5)
►
ஜனவரி
(4)
►
2007
(150)
►
டிசம்பர்
(13)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(7)
►
செப்டம்பர்
(6)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூலை
(3)
►
ஜூன்
(3)
►
மே
(10)
►
ஏப்ரல்
(5)
►
மார்ச்
(60)
►
பிப்ரவரி
(40)
உன்னை பார்த்து இரசித்தேன்
எப்படி தான் வரவழைத்தாய்? என்னை, நீ செல்லும் பாதையெல்லாம்... தோழிகளிடம் பேசும் போதும், தங்கையோடு விளையாடும் போதும், தாய்மடி சாயும் போதும...
தண்டனை...
முத்தத்தின் சத்தம் உலகில் ஓய்திடினும் எந்தன் மனதோடு ஓயவில்லை... அதன் ஈரம் உதட்டோடு காய்ந்திடினும் எந்தன் மனதோடு காயவில்லை... உணர்வுகளால் ...
காதல் கடிதம்
உன் பார்வையால், எந்தன் வெட்கங்கள்... உதிரக் கண்டேன்! உன் தொடுகையால், எந்தன் நாணம்... நொறுங்கக் கண்டேன்! உன் சிரிப்பினில், எந்தன் மனம்... சுர...
வெட்கத்தின் பிறப்பிடம்
முகம் முழுதும் வீசுதடி... உந்தன், வெட்கம் எனும் பூங்காற்று! பிறப்பிடம் தெரியாமல் தோற்றதடி... எந்தன், பார்வை எனுங் கீற்று!
பூக்காரி
சிரிப்பைச் சேகரித்து நூல் கயிற்றில் சிறை பிடித்துச் சில்லரை தேடும் பெண் அவளின் புன்னகைப் புதையலை கண்டு சிறு பூக்கள் யாவும் ஆர்ப்பரிக்கும்
காத்திருக்கிறேன்...
கொஞ்சி கொஞ்சி என்னிடம் பேசுவாய்... மிருதுவாய் வருடி கன்னத்தை கிள்ளுவாய்... தோள் சாய்ந்து எண்ணங்கள் பகிர்வாய்... என்னில் சாய்ந்து வெட்கமும் உ...
தேடும் கண் பார்வை...
அலைகள் அறியா... வெண் கடலின், கருவட்டத் தெப்பம், மையிட்டக் கரையோரம், சுழன்று கொண்டே இருக்கிறதோ... எந்தன் வரவை காண?
ஓரக் கண்ணால்...
ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டு என்னைக் கடந்து செல்லும் பொழுது உன்னுடனே வந்துவிடுகிறது என் மனது... இனியும் என்னைக் கடந்து செல்லும் பொழுது ஓரக...
நீ தான் நான் என்றேன்...
மேகத்தை கேட்டாய்... அதனை உறுக்கி, மழையாய் தந்தேன்! முத்தம் ஒன்று, கடனாய் கேட்டாய்... மொத்தமாய் தந்துவிட்டேன்! புத்தகம் ஒன்று கேட்டாய்... பற...
பூ முகம்
காந்தள் பூவின், இரு விரல்கள் பிரிந்து... குவளைப் பூவில், மலர்ந்தது கண்டேன்... மாலை கதிரவன் மத்தியில் இருக்கும், காந்தள் மலராய் நின் முகம் கண...
நண்பர்கள்
Copyright ©
கவிக்குடில் குமரன்
Blogger Theme
by
BloggerThemes
&
Chethstudios
Design by
Metalab